சக்கோட்டை புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் மருத மடு அன்னையின் திருச்சொரூபம்
மருத மடு அன்னையின் திருச்சொரூபம் பருத்தித்துறை சக்கோட்டை புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
மருத மடு அன்னையின் திருச்சொரூப பவனி நெல்லியடி கரவெட்டி புனித அந்தோனியார் ஆலயத்தில் நேற்று (17.04.2024) பிற்பகல் 5:00 மணிக்கு வருகைதந்து அங்கு சிறப்பு வழிபாடுகளும் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில், இன்று காலை 7 மணியளவில் அங்கிருந்து புறப்பட்ட மருதமடு மாதா திருச்சொரூப பவனி காலை 8:00 மணியளவில் பருத்தித்துறை சக்கோட்டை புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
வழிபாடுகளில் ஈடுபடும் மக்கள்
மருத மடு அன்னையின் திருச்சொரூபத்தை காண யாழ். மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் வருகைதந்து வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |