திருப்பியனுப்பும் அபாயத்தில் வடக்கு மாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட பெருந்தொகை நிதி!
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் விதண்டாவாதமாக கேள்விகளை எழுப்புகின்றார் என கூறி நாடளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை வெளியேற்றுமாறு அரச அதிகாரிகள் கோரியதால் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் அமளி துமளி ஏற்பட்டது.
குறித்த கூட்டத்தில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா அந்த கலந்துரையாடலில் அதிகாரிகளை விமர்சித்துள்ளார்.
இதன்போது அவரை வெளியேற்றுமாறு அதிகாரிகள் தெரிவித்த நிலையில் அங்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர் தலையீட்டின் பின்னர் அமைதியின்மை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்நிலையில் இங்கு கருத்து தெரிவித்த நாடளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, வடக்கு மாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி தொடர்பில் விளக்கமளித்திருந்தார்.
மேலும் கூட்டத்தில் சார்பான விடயங்களை தாண்டி பிழைகளையும் சுட்டிக்காட்ட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
குடும்பம் முழுவதையும் இழந்த இலங்கையருக்கு கனடா தரப்பிலிருந்து ஒரு ஆறுதலளிக்கும் செய்தி News Lankasri