குமுதினி படகுச் சேவை மீண்டும் ஆரம்பம்(Video)
நெடுந்தீவின் பிரதான கடல்வழி போக்குவரத்து மார்க்கமான குமுதினி படகுச் சேவை மீண்டும் பயணிகள் சேவையில் ஈடுபட ஆரம்பித்துள்ளது.
குறித்த படகுச் சேவையானது இன்று(24.08.2023) மீண்டும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
குமுதினிப் படகு பழுதடைந்த நிலையில் திருத்த வேலைகளின் பின்னர் குறிகாட்டுவானில் தரித்துவிடப்பட்டிருந்தது.
திருத்தப்பணிகள்
இந்நிலையில், நேற்று மாலை குமுதினி படகு குறிகாட்டுவானில் இருந்து பயணிகளை ஏற்றியவாறு நெடுந்தீவு சென்று தரித்ததுடன், இன்று(24.08.2023) காலை 7 மணிக்கு நெடுந்தீவிலிருந்து குமுதினி படகு குறிகாட்டுவான் நோக்கிப் புறப்பட்டு அங்கிருந்து மீண்டும் நெடுந்தீவுக்கு பயணித்துள்ளது.

யாழ்.குறிகட்டுவான் மற்றும் நெடுந்தீவு பயணிகளுக்கான கடல்வழிப் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபட்ட குமுதினி படகு அடிக்கடி செயலிழந்த நிலையில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் திருத்தப்பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
குமுதினி படகு 1968ஆம் ஆண்டு முதல் யாழ்.நெடுந்தீவிற்கான கடல்வழி போக்குவரத்து
சேவையில் ஈடுபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

பரபரப்பான 12 மணிநேர பேச்சுவார்த்தை: அடுத்து என்ன நடக்கும்..! பாகிஸ்தானிலிருந்து அவசரமாக வெளியேறும் அமெரிக்கா
நாடு முழுவதும் தீவிர வெப்பநிலை..! முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்
அமெரிக்காவால் தடை விதிக்கப்பட்ட விமானத்தில் பாகிஸ்தானுக்குள் திடீரென்று களமிறங்கியுள்ள மூத்த IRGC அதிகாரிகள்
மாகாபா, புகழ், கானா வினோத் மீது போலீஸில் புகார் அளித்த Watermelon திவாகர்... ரகளையான CWC செட் Cineulagam