மட்டக்களப்பு ஸ்ரீ வடபத்திரகாளியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிசேகம்
மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரசித்திபெற்ற பெரியகல்லாறு உதயபுரம் அருள்மிகு ஸ்ரீ வடபத்திர காளியம்மன் ஆலயத்தின் புனராவர்த்தன பஞ்சகுண்டபட்ச மஹா கும்பாபிசேகம் இன்று (19) வெகுவிமர்சையாக நடைபெற்றுள்ளது.
கடந்த 17ஆம் திகதி கும்பாபிசேக கிரியைகளுடன் மஹா கும்பாபிசேக கிரியைகள் ஆரம்பமாகி நடைபெற்று வந்ததுடன் நேற்று அடியார்கள் பத்திரக்காப்பு சாத்தும் நிகழ்வு நடைபெற்றது.
கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ மு.கு. சச்சிதானந்தமூர்த்தி குருக்கள் தலைமையில் கிரியைகள் ஆரம்பமாகி நடைபெற்று வந்தன.
விசேட அபிசேக பூஜைகள்
இன்றைய தினம் புண்ணியாகவாசனம், யாகபூஜை,ஹோமம், மஹா பூரணாகுதி நடைபெற்று வேததோஸ்திரம், நாதகீதாஞ்சலி, திருமுறை பாராயணம் நடைபெற்று பிரதான கும்பங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன.
இதன்போது, பரிபாலன ஆலயங்கள் மற்றும் மூல ஆலயங்கள் பக்தர்களின் அரோகரா கோசத்துடன் கும்பாபிசேகம் செய்யப்பட்டதுடன் மூலமூர்த்தியாக அடையளில் அமர்ந்துள்ள வடபத்திரகாளியம்மனுக்கு பிரதான கும்பாபிசேகம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, விசேட பூஜைகள் மற்றும் விசேட அபிசேக பூஜைகள் நடைபெற்றதுடன் விசேட அலங்கார பூஜைகளும் இடம்பெற்றன.
ஆலயத்தில் தொடர்ந்து மணடலாபிசேக பூஜை நடைபெற்று எதிர்வரும் 30ஆம் திகதி சங்காபிசேகமும் நடைபெறவுள்ளது. இன்றைய கும்பாபிசேக நிகழ்வில் நாட்டின் பல பகுதிகளிலுமிருந்து பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |