வடக்கில் மாணவர்கள் எதிர்நோக்கும் பாரிய சவால் : நடவடிக்கை எடுக்காத ஆசிரியர்கள்

Northern Province of Sri Lanka Sri Lankan Schools Education
By Uky(ஊகி) Aug 19, 2024 08:23 AM GMT
Uky(ஊகி)

Uky(ஊகி)

in சமூகம்
Report
Courtesy: uky(ஊகி)

வடக்கில் பின்தங்கிய பகுதிகளில் உள்ள பாடசாலை மாணவர்களிடையே மேற்கொண்ட ஆய்வொன்று திடுக்கிடும்படியான முடிவுகளை தந்துள்ளன.

வடக்கில் உள்ள பாடசாலைகளில் கற்றலில் ஈடுபட்டுள்ள மாணவர்களிடையே கற்றலில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு அமைந்துள்ளது.

தேர்தல் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ள அரச ஊழியர்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

தேர்தல் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ள அரச ஊழியர்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

மாணவர்கள் கணித பாடத்தில் எதிர்கொள்ளும் சவால்களை ஆய்வின் ஒரு பகுதியாக கொண்டு பெறப்பட்ட முடிவுகள் இதுவரை சுட்டிக்காட்டப்படாதவையாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

சிறந்த அடைவு மட்டத்தினை மாணவர்கள் பெற்றுக்கொள்வதில் கற்பித்தலில் மட்டும் ஆசிரியர்கள் ஈடுபடுவதால் அது சாத்தியமில்லை என்பது இந்த ஆய்வின் மூலம் வெளிப்படையாவதும் நோக்கத்தக்கது.

மீத்திறனுடைய மாணவர் 

மாணவர்கள் புரிந்து கொள்ளல் மற்றும் வெளிப்படுத்தலை அடிப்படையாகக் கொண்டு அவர்களை வகைப்படுத்தலாம்.

வடக்கில் மாணவர்கள் எதிர்நோக்கும் பாரிய சவால் : நடவடிக்கை எடுக்காத ஆசிரியர்கள் | Challenge Students North Teachers Not Action

அந்த வகைப்பாட்டின் அடிப்படையில்

01) மீத்திறன் மாணவர்கள்

02) திறன் மாணவர்கள்

03) சாதாரண திறன் மாணவர்கள்

04) மெல்லக் கற்போர் என்ற நான்கு வகைப்பாட்டினை இந்த ஆய்வில் ஏற்படுத்திக்கொண்டு மாணவர்களிடையே கருத்துக்கள் பெற்றுக்கொள்ளப்பட்டு அவை பகுப்பாய்வு செய்யப்பட்டன.

விரைவாக புரிந்து கொண்டு தங்கள் புரிதலை விரைவாக வெளிப்படுத்திக் கொள்ளும் மாணவர்கள் மீத்திறன் மாணவர்களாக கொள்ளப்படும்.

இவர்களிடையே அதீத நினைவாற்றல் இருப்பதும் அறிந்த தகவல்களை முன்னர் அறிந்து கொண்ட தகவல்களோடு ஒப்பிட்டு பகுப்பாய்ந்து சூழலுக்கு பொருத்தமான முடிவுகளை வெளிப்படுத்துவதில் திறமையானவர்களாக இவர்கள் இருக்கின்றனர்.

சுயமாக பாடப்பரப்புக்களை கற்றுக்கொள்வதிலும் கூட இவர்கள் ஆர்வத்தைக் கொண்டுள்ளனர்.

பாடசாலைக் கற்றல் பாடப்பரப்புக்களுக்கு மேலதிகமாக சமூகம் சார்ந்தும் அவர்களது சுயவிருப்பத்திற்கு ஏற்ற முறையில் புதிய துறைகள் சார்ந்து முயன்று கற்றுக்கொள்வதில் ஈடுபாட்டைக் கொண்டுள்ளனர்.

அரச ஊழிர்களின் சம்பள அதிகரிப்பு! மாற்றம் தொடர்பில் அரசாங்கத்தின் அறிவிப்பு

அரச ஊழிர்களின் சம்பள அதிகரிப்பு! மாற்றம் தொடர்பில் அரசாங்கத்தின் அறிவிப்பு

ஆசிரியர்கள் காட்டும் அக்கறை

இசைத்துறையில் இசைக்கருவிகளை பயிலல், நடனம், வரலாற்றுத் தேடல், மேம்பட்ட பொருளாதாரம், இலக்கிய ஈடுபாடு, படைப்பாற்றலை வெளிப்படுத்தல், கற்றபடி சுயமாக வருமானமீட்டல், விளையாட்டு, தற்காப்புக்கலை என அவர்களது ஈடுபாடுகள் உள்ள சில துறைகளை அவதானத்தின் அடிப்படையில் எடுத்துக்காட்ட முடியும்.

வடக்கில் மாணவர்கள் எதிர்நோக்கும் பாரிய சவால் : நடவடிக்கை எடுக்காத ஆசிரியர்கள் | Challenge Students North Teachers Not Action

மீத்திறனுடைய மாணவர்கள் நேர முகாமைத்துவம் மற்றும் செயற்பாட்டு நேர்த்தியுடையவர்களாக இருப்பதையும் அவதானிக்க முடிகின்றது.

இந்த வகைப்படுத்தலுக்கு ஏற்ப வடக்கின் பின்தங்கிய பாடசாலைகளில் அதிகளவான மீத்திறன் வெளிப்பாடுடைய மாணவர்களை இனம் காண முடிகின்றது.ஆயினும் அவர்களது ஆற்றல்களை வளர்த்தெடுப்பதில் ஆசிரியர்கள் காட்டும் அக்கறை போதியளவில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

திறனுடைய மாணவர்கள் 

திறனுடைய மாணவர்கள் மீத்திறனுடைய மாணவர்களைப் போன்று புரிதலையும் பொருத்தப்பாடான வெளிப்படுத்தலையும் செய்வதில் சற்றுக் குறைவான திறனை வெளிப்படுத்துபவர்களாக உள்ளனர்.

இவர்களிடையே நினைவாற்றல் குறைந்தளவில் இருப்பதை இனம்காண முடிந்தது.இதனால் முன்னர் அறிந்து கொண்ட தகவல்களோடு இப்போது அறிந்து கொள்ளும் தகவல்களை ஒப்பிட்டுப் பகுப்பாய்வினைச் செய்து கொள்வதில் அதிக சிரமங்களை எதிர்கொள்ளுகின்றனர்.

வடக்கில் மாணவர்கள் எதிர்நோக்கும் பாரிய சவால் : நடவடிக்கை எடுக்காத ஆசிரியர்கள் | Challenge Students North Teachers Not Action

சில திறனுடைய மாணவர்களுக்கு உடன் முன் நினைவூட்டல் இருக்கும் போது அவர்கள் தங்கள் ஒப்பீட்டாற்றலை சிறப்பாக வெளிப்படுத்துவதனையும் அத்தகைய முன் நினைவூட்டல் கிடைக்காத போது சிறப்பான ஒப்பீட்டைச் செய்து கொள்வதில் சிரமப்படுவதனையும் அவதானிக்க முடிகின்றது.

இந்த நிலைமை அவர்களிடையே நிலவும் போசாக்கு குறைபாட்டினால் ஏற்படுவதாகவும் அது சீர் செய்யப்பட்டால் இத்தகைய மாணவர்கள் மீத்திறன் வெளிப்பாட்டுக்கு தயாராக வாய்ப்பேற்படும் எனவும் துறைசார் வைத்திய ஆலோசனை மூலம் அறிய முடிந்ததும் இங்கே நோக்கத்தக்கது.

திறனுடைய மாணவர்கள் மீத்திறனுடைய மாணவர்களாக அல்லது அரைமீத்திறன் உடைய மாணவர்களாக மாற்றம் பெற்றுக்கொள்ளச் செய்ய முடியும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

வடக்கில் பின்தங்கிய பாடசாலைகளிடையே உள்ள மாணவர்களில் அதிகளவான மாணவர்கள் திறனுடைய மாணவர்களாகவே ஆசிரியர்களாலும் கல்விச் சமூகத்தினாலும் இனம் காணப்பட்டு வரும் நிலையும் இருந்து வருகின்றது.இது கவலைக்குரிய விடயமாகும்.

நேரடி விவாதத்திற்கு தயாராகும் ஜனாதிபதி வேட்பாளர்கள்: அரியநேத்திரனுக்கும் அழைப்பு

நேரடி விவாதத்திற்கு தயாராகும் ஜனாதிபதி வேட்பாளர்கள்: அரியநேத்திரனுக்கும் அழைப்பு

மீத்திறனுடைய மாணவர்கள் உரிய காலத்தில் கிடைக்க வேண்டிய போதியளவு ஊட்டச்சத்து கிடைக்காமையினால் திறனுடைய மாணவர்களாக அல்லது அதற்கு கீழ் மட்ட திறன் நிலலைகளை வெளிப்படுத்தும் துர்ப்பாக்கிய நிலையில் இருப்பது கண்டு கொள்ளப்படவில்லை என்பது இந்த ஆய்வின் மூலம் கண்டறியப்படும் திட்டமான முடிவுகளில் ஒன்றாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆகவே திறன் வெளிப்பாடுடைய மாணவர்களில் பாதிக்கும் அதிகமானோரை மீத்திறன் மாணவர்களாக வளர்த்தெடுக்க முடியும் என்ற எண்ணக்கருவும் இந்த ஆய்வின் போதன அவதானிப்புக்கள் மற்றும் அவைசார்பாக எழுப்பப்படும் வினாக்களுக்காக துறைசார் நிபுணர்களிடமிருந்து பெற்றுக்கொண்ட ஆலோசனைகள் மூலமும் எழுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு: களை கட்டும் அருகம்பே உல்லே பகுதி

சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு: களை கட்டும் அருகம்பே உல்லே பகுதி

கீழ்மட்ட நிலைகள் 

சாதாரண திறனுடைய மாணவர்கள் மற்றும் மெல்லக் கற்போர் என்ற கீழ்மட்ட நிலைகளில் வகைப்படுத்தப்படும் மாணவர்கள் கற்றலில் புரிதலையும் அதன்பால் பொருத்தப்பாடான வெளிப்படுத்தல்களையும் மிகக் குறைந்தளவிலேயே வெளிப்படுத்துகின்றவர்களாக உள்ளனர்.

இவர்கள் மீது தாக்கம் செலுத்தும் காரணிகள் சிக்கல் தன்மையானவையாக இருப்பதனை அவதானிக்க முடிகின்றது.பொருத்தமான முதல் நிலைக் காரணியை தெளிவாக அறிந்துகொள்ள மேலும் முனைப்பான ஆய்வுகள் தேவை.

வடக்கில் மாணவர்கள் எதிர்நோக்கும் பாரிய சவால் : நடவடிக்கை எடுக்காத ஆசிரியர்கள் | Challenge Students North Teachers Not Action

கிடைத்த தகவல்களின் மூலம் போசாக்கின்மையும் ஒரு காரணி என அறிந்துகொள்ள முடிகின்றது.ஆயினும் இது மட்டுமே எல்லைப்படுத்தும் காரணியாக இருந்து விடும் என சொல்லிக்கொள்ள முடியாது.

சில கிராமங்களில் மிக வறிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் திறன் மாணவர்களாக இருப்பதும் அவதானிக்கப்பட்டுள்ளது.

பெற்றோர் படிக்காதவர்களாகவும் வசதியற்றவர்களாகவும் இருக்கும் போது அவர்களது பிள்ளைகள் முனைப்பான திறன் வெளிப்பாடுகளை கொண்டுள்ளமையானது கீழ் மட்ட நிலைகளில் தரப்படுத்தும் மாணவர்கள் தொடர்பில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகள் சிக்கல் தன்மையானவை என்பதை மீண்டும் ஒருமுறை எடுத்துரைக்க முடியும்.

இவர்களிடையே மனநிலை மற்றும் வாழிடச் சூழலும் செல்வாக்குச் செலுத்தி நின்றன என்பதையும் அவதானிக்க முடிகின்றது.

வடக்கில் பின்தங்கிய பாடசாலைகளில் கல்வியைத் தொடரும் மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக அவர்களது பாடசாலைச் சூழலும் பாரியளவிலான பங்களிப்பைச் செய்ய வேண்டியதாக இருப்பதும் அறியப்படுகிறது.

நகர்ப்புற பாடசாலைகளில் கற்பித்தலில் ஈடுபடும் ஆசிரியர்களின் பொறுப்புக்கு மேலாக பின்தங்கிய கிராமப்புற பாடசாலைகளில் கற்பித்தலில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு இருக்கும் பொறுப்புக்கள் அதிகமாக இருப்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

ராஜபக்சர்களின் திட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த மைத்திரி!

ராஜபக்சர்களின் திட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த மைத்திரி!

எடுக்கப்பட்ட முயற்சிகள் 

பாடசாலைகளில் நடைபெறும் தேசிய பரீட்சைகளில் 100 வீத சித்தியை ஒவ்வொரு பாடங்களிலும் பெற்றுக்கொள்வதற்காக பின்தங்கிய பாடசாலைகளிலும் அதிகமாகவே முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆயினும் அவை இலக்கை அடைந்தவையாக இல்லை என்பதும் இந்த ஆய்வின் போது அறிந்து கொள்ள முடிந்ததும் குறிப்பிடத்தக்கது.

பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் போது சித்தியடைய முடியாத மாணவர்கள் என்று ஆசிரியர்களால் கருதப்படும் மாணவர்கள் தவிர்க்கப்பட்டு வருகின்றனர்.

வடக்கில் மாணவர்கள் எதிர்நோக்கும் பாரிய சவால் : நடவடிக்கை எடுக்காத ஆசிரியர்கள் | Challenge Students North Teachers Not Action

அத்தகைய மாணவர்கள் அடுத்த வருடம் பரீட்சை எழுதப் பணிக்கப்படுகின்றனர். அல்லது தனிப்பட்ட பரீட்சார்த்தியாக எழுதும்படி வழிகாட்டப்படுகின்றனர் என்று ஆய்வுக்குட்பட்ட பகுதிகளில் இத்தகைய சூழலுக்கு முகம் கொடுத்த மாணவர்களது பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

இந்த நிலை தொடர்பில் கருத்திட்ட சமூக ஆர்வலர்கள் மாணவர்களின் உரிமைகள் மீறப்படுவதாக சுட்டிக்காட்டுகின்றனர்.

பல கிராமப்புற பாடசாலைகளில் பரீட்சைக்கு விண்ணப்பிப்பது தொடர்பில் இவ்வாறான நடைமுறைகள் பின்பற்றப்பட்டு பரீட்சை முடிவுகளில் 100 வீத சித்தியை காண்பிப்பதன் மூலம் சிறந்த கற்பித்தல் நடைபெற்றுவருவதாக காட்டபாபட்டு பாராட்டுக்களை பெற்றுக்கொளாவது கவலைக்குரிய விடயமாகும்.

இதனால் பல மாணவர்களது பாடசாலை இடைவிலகலுக்கு பாடசாலைகளின் மேற்படிச் செயற்பாடுகள் காரணமாவதும் நோக்கத் தக்கது.

மெல்லக் கற்போருக்கான மேலதிக வகுப்புக்களை முறைசார முறையில் முன்னெடுக்கப்பட்ட பல சந்தர்ப்பங்களும் உள்ளன.எனினும் இவை உரிய தொடர்ச்சியைப் பேணி இலக்கை அடைந்ததாக அவதானிக்க முடியவில்லை.

அரசியல்வாதிகளின் கட்சி தாவல்கள் தொடர்பில் வெளியான தகவல்

அரசியல்வாதிகளின் கட்சி தாவல்கள் தொடர்பில் வெளியான தகவல்

மீத்திறன் மாணவர்களின் சவால் 

சில பின்தங்கிய பாடசாலைகளில் உள்ள மீத்திறன் மற்றும் அரை மீத்திறன் மாணவர்கள் பாடசாலைகளிலும் மாலை நேர கல்வி நிலையங்களிலும் பாரிய சவாலை எதிர்கொண்டு வருவதையும் அவதானிக்க முடிந்தது.

எனினும் இது தொடர்பில் கவனமெடுக்க வேண்டிய ஆசிரியர்கள் கவனமெடுக்காது நடந்து கொள்கின்றனர். A தரச் சித்தியைப் பெற வேண்டிய மாணவர்களை S தரச் சித்தியைப் பெற வைப்பதற்காக முயற்சிக்கப்படுவதாக தன் கருத்துக்களை எழுத்தாளரும் ஊடகவியலாளருமாக பணியாற்றிவரும் நதுநசி தன் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

வடக்கில் மாணவர்கள் எதிர்நோக்கும் பாரிய சவால் : நடவடிக்கை எடுக்காத ஆசிரியர்கள் | Challenge Students North Teachers Not Action

மீத்திறன் மற்றும் அரை மீத்திறன் உடைய மாணவர்களோடு மெல்லக் கற்போர் மற்றும் சாதாரண திறனுடைய மாணவர்களை ஒரே வகுப்பறையில் வைத்து கற்பிக்கும் போது மெல்லக்கற்போரும் புரிந்து கொண்ட பின்னரே அடுத்த பாடப்பரப்புக்குச் செல்லும் சூழல் இருப்பதால் மீத்திறன் மாணவர்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்கொள்வதும் இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

எனினும் இவ்வாறான வகுப்பறைகள் தொடர்பில் இவற்றொடு தொடர்புடைய ஆசிரியர்கள் மற்றும் இப்பாடசாலை அதிபர்களுடன் உரையாடிய போது அவர்கள் மீத்திறன் அரை மீத்திறன் மாணவர்களின் அசௌகரியங்களை இனங்கண்டு கொண்டவர்களாக இருக்கவில்லை என்பதை அறிய முடிந்தது.

மீத்திறன் அரை மீத்திறன் மாணவர்களின் நிலைகளை சுட்டிக்காட்டிய போதும் அது தொடர்பில் பொறுப்பான பதிலளிப்புக்களை அவர்களிடம் இருந்து பெற முடியவில்லை.

மாணவர்களின் உணர்வுகளை அவர்களது சூழல் சார்ந்து அவதானித்து அதன்பால் சரியான முறையில் அவர்கள் வழிகாட்டப்படாது போனால் வடக்கில் உள்ள பின்தங்கிய மாணவர்களின் நிலை எதிர்காலத்தில் மோசமாகும் வாய்ப்புக்களை அதிகம் எதிர்கொள்ளும் என்பதில் ஐயமில்லை.            

30 நாட்களுக்குள் நாட்டு மக்களுக்கு வழங்கப்படவுள்ள உறுதிமொழிகள்

30 நாட்களுக்குள் நாட்டு மக்களுக்கு வழங்கப்படவுள்ள உறுதிமொழிகள்

பங்களாதேஷினுடைய அரசாங்க வீழ்ச்சி : இலங்கைத் தேர்தலை உற்றுநோக்கும் இந்தியா

பங்களாதேஷினுடைய அரசாங்க வீழ்ச்சி : இலங்கைத் தேர்தலை உற்றுநோக்கும் இந்தியா

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  
மரண அறிவித்தல்

கோண்டாவில், Wellawatte, Orpington, United Kingdom

12 Jun, 2025
அகாலமரணம்
மரண அறிவித்தல்

உடுவில், உரும்பிராய், Nancy, France, Montreal, Canada

10 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Mantes-la-Jolie, France

11 Jun, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு

11 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Scarbrough, Canada, Ontario, Canada

14 Jun, 2025
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, இறம்பைக்குளம், Scarborough, Canada

12 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, கிளிநொச்சி, Kleve, Germany

26 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
25ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, Stuttgart, Germany, Scarborough, Canada

10 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

30 Jun, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், சுவிஸ், Switzerland

14 Jun, 2013
மரண அறிவித்தல்

மீசாலை, Frankfurt, Germany, Mörfelden-Walldorf, Germany

11 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 3ம் வட்டாரம், Évry-Courcouronnes, France

09 Jun, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, சுண்டிக்குளி, Scarborough, Canada

11 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, மூதூர், புதுக்குடியிருப்பு, பருத்தித்துறை, Catford, United Kingdom

13 Jun, 2015
மரண அறிவித்தல்

இருபாலை, திருநெல்வேலி, கொழும்பு, London, United Kingdom

07 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், London, United Kingdom

25 May, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US