அரசியல்வாதிகளின் கட்சி தாவல்கள் தொடர்பில் வெளியான தகவல்
இந்த வாரம் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஆதரவான அரசியல்வாதிகளின் பல கட்சித் தாவல்கள் விரைவில் இடம்பெறவுள்ளதாக உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதில் பல ஜக்கிய மக்கள் சக்தியின் (SJB) எம்.பிக்களும் அடங்குவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொள்கை அடிப்படையிலான அரசியல்
இது தொடர்பாக ஏற்கனவே பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்தப்பட்டு வருகின்றதோடு ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட கிட்டத்தட்ட முப்பது வெவ்வேறு அரசியல்வாதிகள் ஏற்கனவே பக்கம் மாறியுள்ளனர்.
இந்நிலையில், கட்சி தாவும் தவளை அரசியலுக்கு தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் முடிவு கட்டப்படும் என்று ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayaka) தெரிவித்துள்ளார்.
மேலும், எமது நாட்டுக்கு கொள்கை அடிப்படையிலான அரசியலே தேவைப்படுவதோடு அந்த வழியிலேயே எமது அணி பயணிக்கின்றது என்றும் அனுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.





உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

பிரித்தானியாவில் மாணவர்களின் தலைகளை கழிப்பறையில் திணித்து: வெளிச்சத்திற்கு வந்த கொடூரம் News Lankasri

தங்கம், வெள்ளி நகைகளை ஏன் பிங்க் நிற பேப்பரில் சுற்றி தருகிறார்கள்? பலருக்கும் தெரியாத ரகசியம்! Manithan
