தமிழர் பகுதியில் அநுரவின் 2345 கோடிரூபாய் திட்டம்! பின்னணி தொடர்பில் வெளியான தகவல்
வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் கடுமையான நீர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்ட ஒரு பெரிய நீர்ப்பாசன முயற்சியான கிவுல் ஓயா நீர்த்தேக்க மேம்பாட்டுத் திட்டத்தை மீண்டும் தொடங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
முதலில் 2011 ஆம் ஆண்டு ரூ. 4,170 மில்லியன் மதிப்பீட்டில் அங்கீகரிக்கப்பட்ட இந்தத் திட்டம், மகாவலி அமைப்பின் 'எல்' மண்டலத்திற்குள் நான்கு ஆண்டுகளுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டது.
இந்தநிலையில் தமிழர் பகுதிகளில் பல நீரேந்து பிரதேசங்கள் உள்ளன, அதனை விடுத்து வேறொரு திட்டத்தின் மூலம் அரசாங்கம் நுழைவது தான் கேள்விகளை எழுப்பியுள்ளது.
மேலும், இந்த அரசாங்கம் சில செயற்பாடுகளின் போது இதனை நாங்கள் செய்யவில்லை கடந்த அரசாங்கம் செய்தது, அதற்கு முன்னைய அரசாங்கம் செய்தது என்று கூறுகின்றது. ஆனால் எல்லா அரசாங்களின் கொள்கைகளும் ஒன்றாக தான் இருக்கின்றது.
இந்த திட்டம் பெரும் ஆபத்தாகத்தான் இருக்க போகின்றது, தமிழர்களின் இடங்கள், அடையாளங்கள் இதனால் அழிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி..
சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 5 போட்டியாளர் மித்ரா அம்மா-அப்பாவிற்கு கிடைத்த பெரிய உதவி... Cineulagam
கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan
கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri