நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டின் மீது தாக்குதல்! வெளியான சிசிடிவி காணொளி (VIDEO)
திருகோணமலை - கிண்ணியா பகுதியில் நேற்று முன் தினம் ஏற்பட்ட படகு விபத்தில் பலர் உயிரிழந்ததை தொடர்ந்து அங்கு பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது.
அத்துடன் குறித்த அனர்த்தம் காரணமாக ஆத்திரமடைந்த பிரதேசவாசிகள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கின் (M.S.Thowfeek) வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் அந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான சிசிடிவி காணொளி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
அதில், பெருந்திரளான இளைஞர்கள் நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டு வாயில் கதவை உடைத்துக் கொண்டு நுழைந்து வீட்டின் மீது தாக்குதல் நடத்தியுள்ளதுடன், அங்கிருந்த பொருட்களையும் சேதப்படுத்தியுள்ளமை தெளிவாக பதிவாகியுள்ளது.
தொடர்புடைய செய்தி...
பலரை காவு கொண்ட படகு விபத்து! நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டின் மீது தாக்குதல்
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 2 நாட்கள் முன்
கிரீன்லாந்திற்கு படைகளை அனுப்பும் ஜேர்மனி, பிரான்ஸ் - ட்ரம்ப்பிற்கு அழுத்தம் அதிகரிப்பு News Lankasri
Bigg Boss: ரெட் கார்டு குறித்து ஏன் கேட்கக்கூடாது? சான்ட்ராவின் நடிப்பை அம்பலப்படுத்திய போட்டியாளர்கள் Manithan