நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டின் மீது தாக்குதல்! வெளியான சிசிடிவி காணொளி (VIDEO)
திருகோணமலை - கிண்ணியா பகுதியில் நேற்று முன் தினம் ஏற்பட்ட படகு விபத்தில் பலர் உயிரிழந்ததை தொடர்ந்து அங்கு பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது.
அத்துடன் குறித்த அனர்த்தம் காரணமாக ஆத்திரமடைந்த பிரதேசவாசிகள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கின் (M.S.Thowfeek) வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் அந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான சிசிடிவி காணொளி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
அதில், பெருந்திரளான இளைஞர்கள் நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டு வாயில் கதவை உடைத்துக் கொண்டு நுழைந்து வீட்டின் மீது தாக்குதல் நடத்தியுள்ளதுடன், அங்கிருந்த பொருட்களையும் சேதப்படுத்தியுள்ளமை தெளிவாக பதிவாகியுள்ளது.
தொடர்புடைய செய்தி...
பலரை காவு கொண்ட படகு விபத்து! நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டின் மீது தாக்குதல்
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் Cineulagam