கிளிநொச்சியில் நிலவும் சீரற்ற காலநிலை : பொதுமக்கள் பாதிப்பு (Video)
கிளிநொச்சியில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கண்டாவலைப் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட தருமபுரம் புளியம்பொக்கனை ஆகிய பகுதிகளில் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இதனால் சிலர் தமது இருப்பிடங்களை விட்டு அயலவர், உறவினர் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
மேலும் தருமபுரம் மத்தியகல்லுரி, தருமபுரம் இலக்கம் 1 பாடசாலை ஆகியவற்றுக்கு இன்று விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
26 குடும்பங்கள் பாதிப்பு
இந்த அனர்த்தம் தொடர்பாக பிரதேச செயலகம் கிராமசேவையாளர் ஊடாக பாதிக்கப்பட்டவர்களிடம் விபரங்களை சேகரித்துவருகின்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை கிளிநொச்சி கனகாம்பிகைக்குளத்தின் வான்பாய்வதால் 26 குடும்பங்கள் வெள்ளநீரில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன், மக்களின் குடியிருப்புக்களிற்குள்ளும் வெள்ள நீர் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |









நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா





கூலி பட வெற்றியால் கைதி 2 படத்திற்காக லோகேஷ் கனகராஜ் சம்பளத்தை உயர்த்திவிட்டாரா?... இத்தனை கோடியா? Cineulagam

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

கைவிடப்பட்ட அஜித்தின் கஜினி பட போட்டோ ஷுட் புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா?... செம ஸ்டைலிஷ் போட்டோஸ் Cineulagam

பிரித்தானியாவின் பிரபலமான ஐஸ்கிரீம் வியாபாரிக்கு 8 முறை கத்திக்குத்து: இரண்டு பேர் கைது! News Lankasri
