தேசிய ரீதியாக நடைபெற்ற போட்டியில் 06 தங்கப் பதக்கங்களை சுவீகரித்த கிளிநொச்சி
மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய மட்ட விளையாட்டுப் போட்டியில் 06 தங்கப் பதக்கத்தையும் , 10 வெள்ளிப் பதக்கத்தையும் பெற்று கிளிநொச்சி மாவட்டம் முதலாமிடத்தினை பெற்றுக் கொண்டது.
சமூக சேவைகள் திணைக்களத்தினால் 2025 ஆம் ஆண்டிற்கான மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய மட்ட விளையாட்டுப் போட்டி நடாத்தப்பட்டது.
விளையாட்டு போட்டி
மகிந்த ராஜபக்ச விளையாட்டு மைதானத்தில் நேற்று (03.04.2025) நடைபெற்றது.

தேசிய மட்டத்தில் 25 மாவட்டத்திலிருந்தும் இதில் போட்டியாளர்கள் பங்குபற்றியிருந்தனர்.
குறித்த விளையாட்டு போட்டியில் கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து 21 மாற்றுத்திறனாளிகள் பங்குபற்றியிருந்தனர்.
இந்த நிகழ்வில் கிராமிய அபிவிருத்தி சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர், அமைச்சின் செயலாளர் மற்றும் சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளரும் பங்குபற்றியிருந்தனர்.
















பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் Cineulagam
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri