அமெரிக்க உயர் நீதிமன்றத்தில் ஒக்டோபரில் இடம்பெறவுள்ள முக்கிய விசாரணை
அமெரிக்க உயர் நீதிமன்றத்தின் தற்போதைய பதவிக்காலம் அண்மையில் முடிவடைந்த நிலையில், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் தொடங்கவுள்ள அடுத்த தவணைக்கான முக்கிய வழக்குகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.
இதில் துப்பாக்கிக் கட்டுப்பாடு, மாற்று பாலினத்தவர் (LGBT) உரிமைகள், புதிய வாக்காளர் கட்டுப்பாடுகள் மற்றும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் குடியேற்றக் கொள்கை தொடர்பான வழக்குகள் விசாரிக்கப்படவுள்ளன.
ட்ரம்பின் குடியேற்றக் கொள்கை
நீதிமன்றம் 6-3 என்ற பழமைவாத பெரும்பான்மையைக் கொண்டுள்ளதால், அமெரிக்க சட்டங்களை வலதுசாரி கொள்கைகளை நோக்கி நகர்த்தி வருவதாகக் கருதப்படும் வேளையில் இந்த அடுத்தகட்ட வழக்குகள் பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ளன.
முக்கியமாக, கனெக்டிகட் மற்றும் இல்லினாய்ஸ் மாநிலத்தின் குக் கவுண்டியில் நடைமுறையில் உள்ள ஏஆர்-15 போன்ற தாக்குதல் பாணி துப்பாக்கிகளுக்கான தடைகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை நீதிமன்றம் விசாரிக்கிறது.

இதனைத் துப்பாக்கி ஆர்வலர்கள் பொதுவான உரிமை என்றும், அதிகாரிகள் இதனைப் பயங்கரவாதிகள் பயன்படுத்தும் போர் ஆயுதம் என்றும் வாதிடுகின்றனர்.
அதேபோல், அரிசோனா மாநிலத்தில் வாக்காளர் பதிவுக்குக் குடியுரிமைச் சான்றிதழைக் கட்டாயமாக்கவும், அமெரிக்க குடிமக்கள் அல்லாதோரை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கவும் ட்ரம்ப் நிர்வாகம் ஆதரவளிக்கும் குடியரசுக் கட்சியின் கோரிக்கையை நீதிமன்றம் பரிசீலிக்கிறது.
மேலும், கொலராடோ மாநிலத்தின் முன்பள்ளி நிதியுதவித் திட்டத்தில், மாற்றுப் பாலின பிரிவினருக்கு எதிரான பாகுபாடற்ற விதிமுறைகளிலிருந்து தங்களுக்கு விலக்கு அளிக்கக் கோரி டென்வர் கத்தோலிக்க பேரராயம் தொடர்ந்த வழக்கும் இந்த அமர்வில் விசாரிக்கப்படவுள்ளது.
125 நாட்கள் சிதையாமல் பாதுகாக்கப்பட்ட கமேனியின் உடல்! ஆச்சரியப்படுத்தும் எம்பாமிங் பின்னணி என்ன? Manithan
எம்பாப்பேவின் பெனால்டி கோலால் தப்பிப் பிழைத்த பிரான்ஸ்: கடைசி வரை பயம் காட்டிய பராகுவே News Lankasri