வடக்கு ஆளுநரை சந்தித்த கேப்பாப்பாப்பிலவு காணி உரிமையாளர்கள்
முல்லைத்தீவு மாவட்டம் கேப்பாபிலவில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளின் உரிமையாளர்கள் வட மாகாண ஆளுநர் பி எஸ் எம். சார்ள்ஸை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
குறித்த சந்திப்பானது யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஆளுநர் செயலகத்தில் இன்று (11.04.2024) இடம்பெற்றுள்ளது.
தொடர் போராட்டம்
முல்லைத்தீவு கேப்பாபிலவில் இராணுவத்தினர் வசமுள்ள தமது சொந்த காணிகளை விடுவிக்க கோரி மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் இன்றையதினம்(11) ஆளுநரைச் சந்தித்ததுடன் தமது பிரச்சினைகள் குறித்து ஆராய்வதாக ஆளுநர் கூறியுள்ளார்.
இந்த சந்திப்பில் காணி உரிமையாளர்கள் 6 பேர் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |