முன்னாள் அமைச்சர் கெஹெலிய தம்முடன் சிறையில் வைத்திருந்த அங்கீகரிக்கப்படாத பொருட்கள்
தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள இலங்கையின் முன்னாள் சுகாதார அமைச்சர் ரம்புக்வெல்லவிடம் இருந்து பல அங்கீகரிக்கப்படாத பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
லஞ்ச ஊழல் குற்றச்சாட்டில், 2025 மே 7 ஆம் திகதியன்று ரம்புக்வெல்ல கைது செய்யப்பட்டு, மே 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அங்கீகரிக்கப்படாத பொருட்கள்
இந்தநிலையில், சிறைச்சாலையில் அவரிடம் இருந்து மீட்கப்பட்ட பொருட்களில் யானை முத்து, பல மரப்பட்டை துண்டுகள் மற்றும் ஒரு சிறிய பொறிக்கப்பட்ட புத்தர் சிலை ஆகியவை அடங்கியுள்ளன.
விசாரணையின்போது, இந்த பொருட்கள் தனது தந்தையால் தனக்கு வழங்கப்பட்டதாகவும், தனது பாதுகாப்புக்காக அவற்றை சிறைக்கும் எடுத்து வந்ததாக ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.
எனினும்,இந்த பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, மேலதிக விசாரணைக்காக அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்துக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளன.

ட்ரம்பால் அறிவிக்கப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் போர்நிறுத்தம்: பிரதமரிடம் விளக்கம் கேட்கும் எதிர்க்கட்சிகள் News Lankasri
