கெஹெலியவிற்கு மீண்டும் விளக்கமறியல் நீடிப்பு
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல (Keheliya Rambukwella) உள்ளிட்ட 7 பேரையும் எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
குறித்த தீர்ப்பானது, மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தினால் இன்று (08.04.2024) வழங்கப்பட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி 2 அன்று தரமற்ற மனித நரம்பு வழி இம்யூனோகுளோபுலின் மருந்துகளை கொள்முதல் செய்ததன் தொடர்பான 10 மணிநேர விசாரணையின் பின்னர் கெஹெலிய கைது செய்யப்பட்டார்.
தொடரும் விளக்கமறியல்
அதேவேளை , கெஹெலிய கைது செய்யப்படுவதற்கு முன்னர் போதைப்பொருள் கொள்வனவு மோசடி தொடர்பில் ஏழு பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையிலேயே, கெஹெலிய மற்றும் குறித்த 07 நபர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மீனா செய்த காரியம், செம கோபத்தில் கோமதியிடம் செந்தில் கூறிய விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam
அப்பாவின் கார்பன் காப்பி... ஜாய் கிறிஸில்டாவின் புதிய பதிவு! சிக்கப்போகும் மாதம்பட்டி ரங்கராஜ் Manithan
புடின் - ட்ரம்ப் சந்திப்பு தேவை இல்லை... உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா முன்வைக்கும் யோசனை News Lankasri
தங்கத்திற்கான வரிவிலக்கு சலுகையை முடிவுக்கு கொண்டு வந்த சீனா., உலக தங்க விலை நிலவரத்தில் தாக்கம் News Lankasri