ஊர்காவற்றுறை முச்சக்கரவண்டி சாரதிகளினால் அமைச்சர் டக்ளஸிடம் கோரிக்கை
யாழ். (Jaffna) ஊர்காவற்றுறை பிரதேச முச்சக்கரவண்டிகள் உரிமையாளர்களினால் எதிர்கொள்ளப்படும் அசௌகரியங்களுக்கு தீர்வு பெற்றுத் தருமாறு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் (Douglas Devananda) கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
குறித்த கோரிக்கையில், ஊர்காவற்றுறை பகுதியில் அதிகளவிலான முச்சக்கரவண்டிகள் இருந்தும் தமது
சேவைகளை கட்டமைப்பு ரீதியாக முன்னெடுப்பதில் உரிமையாளர்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்கொண்டு
வருகின்றனர்.
மேலும், முச்சக்கரவண்டிகள் தமது சேவையை மேற்கொள்ள ஒரு சங்க கட்டமைப்பு இல்லாத காரணங்களால் பெரும் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
மாநகரசபை சாரதிகள்
இதன்காரணமாக, தமது பிரதேசத்திற்கு சங்க கட்டமைப்பு ஒன்றினை ஏற்படுத்தி தர வேண்டும்” என முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அது மாத்திரமன்றி, நீண்டகாலமாக யாழ். மாநகர சபையில் சாரதிகளாக பணியாற்றும் ஊழியர்கள், தமக்கான நிரந்தர நியமனங்களை பெற்றுத்தருமாறு கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
மேலும் அவர்கள், தற்போதைய சூழலில் வாழ்க்கை செலவுகள் அதிகரித்துள்ளமையினால் பெறும் வருமானம் அதற்கு ஈடுசெய்யும் வகையில் இல்லாதுள்ளது.
நிரந்தர பணி
இந்நிலையில், தமது பணியை நிரந்தரமாக்கி தருவதனூடாக வாழ்வாதாரத்தை நிரந்தரமாக மேம்படுத்திக்கொள்ள முடியும்.

ஆகையால், அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு தாருங்கள் என கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
இவற்றிற்கமைய, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ். மாவட்ட முச்சக்கரவண்டி சங்க நிர்வாகத்தினருடன் கலந்தாலோசித்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் தீவகத்தில் தற்போது சேவையில் ஈடுபடும் முச்சக்கரவண்டிகளின் பட்டியல்களில் ஒன்றினை சமர்ப்பிக்குமாறும் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 22 மணி நேரம் முன்
சூடுபிடிக்கும் கள நிலவரம்: முக்கிய இடங்களை இலக்கு வைத்து தாக்குதல் - ஈரான் ஜனாதிபதி தொடர்பில் வெளியான தகவல்
மத்திய கிழக்கில் உச்சக்கட்ட போர் பதற்றம் ! ஈரானிலிருந்து உடனே வெளியேறுமாறு பல நாடுகள் அவசர அறிவிப்பு
NEW ஈரானின் முக்கிய இடங்களை குறிவைத்து சரமாரியான தாக்குதல்! டிரம்பின் அதிரடி அறிவிப்பு - ஈரான் எடுக்கப்போகும் நடவடிக்கை
கட்டாரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையம் வந்த சர்வதேச சிவப்பு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நபர்
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan
இந்த வாரம் ஞாயற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று திரைப்படங்கள்.. பிளாக்பஸ்டர் மூவிஸ் Cineulagam
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
அந்த நடிகை வெளியிட்ட போட்டோ.. எனக்கும் என் குழந்தைகளுக்கும் அவமானம்: விஜய் மீது சங்கீதா அடுக்கடுக்கான புகார் Cineulagam