முடிவுக்கு வரும் ரணிலின் கால அவகாசம்! பிரதமரின் தலைவிதியை தீர்மானிக்கும் பசில் தரப்பு
”பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் காலமும் முடிவடைகின்றது” என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
கால அவகாசம்
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், "பிரச்சினைகளை தீர்ப்பதாக பிரதமர் கோரிய கால அவகாசம் இன்னும் சில நாட்களில் முடிவடைகின்றது. பிரதமரின் தலைவிதியை பசில் தரப்பு தீர்மானிக்கும்.

எரிபொருள் தட்டுப்பாடு
எரிபொருளின் விலைகள் 50 ரூபா, 100 ரூபாவில் அதிகரிக்கும் போது பிரதமர் என்ன செய்கின்றார் என்பது கேள்விக்குறி” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பலத்த எதிர்ப்பிற்கு மத்தியில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியை இராஜினாமா செய்திருந்தார். இதனையடுத்து ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்றிருந்தார்.
என்ற போதும் நாட்டில் நாளுக்கு நாள் நெருக்கடி நிலையானது தீவிரமடைந்து வருவதாக பல தரப்பினரும் விசனம் முன்வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஜனாதிபதி கோட்டாபய பக்கமிருந்த எதிர்ப்பலை தற்போது ரணில் விக்ரமசிங்க பக்கமும் திரும்ப ஆரம்பித்துள்ளது.
அத்துடன் ராஜபக்சர்களை பாதுகாக்கும் பாதுகாவலனாக ரணில் விக்ரமசிங்க செயற்பட்டு வருவதாகவும் பலரும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் தீவிரமடையும் நெருக்கடி நிலை! சஜித் பிரேமதாச வெளியிட்டுள்ள பகிரங்க அறிவிப்பு |
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 14 மணி நேரம் முன்
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan