சபை உறுப்பினர்களால் விமர்சிக்கப்படும் கரவெட்டி பிரதேச சபை தவிசாளர்.. நிர்வாகத்திறன் அற்றவரா!
வடமராட்சி தெற்கு மற்றும் மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் ஆளுமை மிக்கவர் என சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என்றும், அவர் நிர்வாகத் திறனற்ற முறையில் செயல்படுவதாகவும் சபையின் உறுப்பினர் அஜந்தன் குற்றம் சுமத்தியுள்ளார்.
நேற்று(11.05.2026) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தவிசாளர் மீதான விமர்சனம்
இதன்போது, அவர் மேலும் தெரிவிக்கையில்,
சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் காணொளிகளில் தவிசாளரின் செயல்பாடுகள் கௌரவமாகச் சித்தரிக்கப்பட்டாலும், உண்மையில் உப தவிசாளர் சக உறுப்பினர்களிடம் நடந்து கொள்ளும் விதம் மிகவும் அநாகரிகமானது.
சபை அமர்வுகளின் போது உறுப்பினர்களைத் தரம் தாழ்ந்த சொற்களால் விமர்சிப்பதையும், பதற்றமான சூழலை உருவாக்குவதையும் அவர் வழக்கமாகக் கொண்டுள்ளார். ஒரு தவிசாளருக்குரிய பண்பு அவரிடம் இல்லை.

தவிசாளர் ஆளுமை மிக்கவர் எனக் கூறப்படுவதை நாங்கள் மறுக்கிறோம். கடந்த சபை அமர்வில் சமர்ப்பிக்கப்பட்ட முதலாம் காலாண்டுக்கான வருமான அறிக்கை குறித்து உறுப்பினர்கள் கேள்வி எழுப்பிய போது, அவரால் முறையான விளக்கத்தை அளிக்க முடியவில்லை.
சபைக்குக் கிடைத்த மொத்த வருமானம் எவ்வளவு என்ற அடிப்படைத் தகவலைக் கூடச் சொல்லத் தெரியாத ஒரு நபர், தவிசாளர் நாற்காலியில் அமர்ந்திருப்பது வேதனையானது.
தீர்க்கதரிசனமான திட்டமிடல்
நிதி நிலைமை மற்றும் அறிக்கைகளைப் புரிந்து கொள்ளும் ஆற்றல் அவரிடம் இல்லை என்பது இதன் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பிரதேச அபிவிருத்தி குறித்துப் பேசுகையில், "மக்களுக்கான அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்குத் தீர்க்கதரிசனமான திட்டமிடல் அவசியம்.
நீண்ட கால அடிப்படையில் நிதியைக் கையாளுதல் மற்றும் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் திறன் தவிசாளரிடம் இல்லை. முறையான திட்டமிடல் இல்லாத காரணத்தால் கரவெட்டி பிரதேச சபையின் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், சபை நடவடிக்கைகளை ஊடகங்கள் வாயிலாக மக்கள் அறிந்துகொள்வதைத் தவிசாளர் திட்டமிட்டுத் தடுத்து வருகிறார்.
மேலும், சபை அமர்வுகளுக்குள் ஊடகங்களை அனுமதிக்க மறுப்பது ஜனநாயகத்தை நசுக்கும் செயலாகும்.
ஜனநாயகம் பற்றிப் பேசும் தமிழரசுக்கட்சியின் தவிசாளர், நடைமுறையில் ஊடக சுதந்திரத்தைப் பறித்து உண்மைகளை மறைக்கப் பார்க்கிறார் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
விபத்தில் சிக்கிய சோழன்.. மருத்துவமனையில் அனுமதி.. கதறி அழும் நிலா.. அய்யனார் துணை சீரியல் Cineulagam
அய்யனார் துணை சீரியல் படப்பிடிப்பு தளத்தில் நடிகை மதுமிதாவிற்கு ஏற்பட்ட சோகம்... வெளிவந்த வீடியோ Cineulagam