கற்பிட்டி பகுதியில் பெட்ரோல் கடத்த முற்பட்ட மூவர் கைது (Photos)
கற்பிட்டி பகுதியில் சட்டவிரோதமாக பெட்ரோல் கடத்த முயன்ற மூவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வாரியாபொல - கற்பிட்டி பகுதிக்கு சட்டவிரோதமாக லொறியொன்றில் பெட்ரோல் கடத்த முற்பட்ட மூவர் கற்பிட்டி கடற்படை புலனாய்வு பிரிவினரால் நேற்று (20) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடத்தல் சம்பவம்
கற்பிட்டி கடற்படை புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய கற்பிட்டி மீன் வாடியில் வைத்து குறித்த லொறியை மறைத்து சோதனைகளுக்கு உற்படுத்தப்பட்டுள்ளது.
இதன்போது 2030 லீட்டர் பெட்ரோல் கைப்பற்றபட்டதுடன் சந்தேகத்தின் பேரில் மூவர் கடற்படைப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கற்பிட்டி, வாரியபொல, ரத்மலான பகுதிகளைச் சேர்ந்தவர்களென கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்ற நடவடிக்கை
பெட்ரோல் மற்றும் கடத்துவதற்கு பயன்படுத்திய லொறி என்பன மேலதிக நடவடிக்கைகளுக்காக கற்பிட்டிப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளை கற்பிட்டி பொலிஸார் மேற்கொண்டுவருவதுடன் புத்தளம்
நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.




