மன்னார் நகர பிரதேச செயலாளராக கடமையை பொறுப்பேற்ற கே.காந்தீபன்
மன்னார் நகர பிரதேச செயலாளராக கே.காந்தீபன் நியமிக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம்(1) தனது கடமையை பொறுப்பேற்றார்.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் முன்னிலையில் அவர் தனது கடமையை பொறுப்பேற்றார்.
பதவி உயர்வு
மன்னார் நகர பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்ட கே.காந்தீபன் 2012 ஆம் ஆண்டு இலங்கை நிர்வாக சேவைக்கு தெரிவாகி 2013 தொடக்கம் 2017 வரை கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்கள உதவி பணிப்பாளராக கடமையாற்றினார்.
2017 தொடக்கம் 2022 வரை முல்லைத்தீவு மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளராகவும் ,2022 தொடக்கம் 2025 வரை பதுளை உதவி தேர்தல்கள் ஆணையாளராகவும் கடமையாற்றிய நிலையில் மன்னார் பிரதேச செயலாளராக கடமையாற்றிய கே.பிரதீப் உதவி மாவட்ட செயலாளராக பதவி உயர்வு பெற்ற நிலையில்,மன்னார் நகர பிரதேசச் செயலாளராக கே.காந்தீபன் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.








போர் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம்... தயாராக இருக்குமாறு பிரான்ஸ் மருத்துவமனைகளுக்கு உத்தரவு News Lankasri

தர்ஷன் திருமணத்தின் சிக்கல்களுக்கு நடுவில் ஜீவானந்தம் பார்கவிக்கு கொடுத்த பரிசு... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
