மாத்தறையில் ரயில் மோதி இருவர் பலி
மாத்தறை, கொக்கலை பிரதேசத்தில் ரயிலில் கார் மோதுண்டு விபத்துக்குள்ளான சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
காலி பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு ஆணும், பெண்ணும் மருத்துவ சிகிச்சைக்காக சென்றுவிட்டு திரும்பும் வழியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்த பெண் காரை ஓட்டிவந்த நிலையில், கண்டியில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த கடுகதி ரயில், கொக்கல பகுதியில் காருடன் மோதி, சுமார் 400 மீட்டர் தூரம் வரை காரை இழுத்துச் சென்றுள்ளது.
கொக்கல விமானப்படை தளத்திற்கு அருகில் ரயிலில் இருந்து காரை தனியாக பிரித்து, உள்ளே சிக்கிக் கொண்டவர்களை அப்பகுதி மக்கள் மீட்டுள்ளனர். எனினும் இருவரும் விபத்தின் காரணமாகவே உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.