கோர விபத்தில் சிக்கி உயர்தர மாணவன் பலி - மற்றுமொருவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி
கண்டியில் பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்திற்குள்ளானதில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கண்டி - பல்லேகலே சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவிருந்த கிரிக்கெட் போட்டி ஏற்பாட்டிற்காக இன்று காலை (02) சென்ற போதே விபத்து சம்பவித்துள்ளது.
பொலிஸார் விசாரணை
இந்த விபத்தில் மற்றொரு மாணவர் படுகாயமடைந்து கண்டி தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

கண்டியில் உள்ள பிரபல பாடசாலையில் கல்வி பயிலும் 12 ஆம் வகுப்பு உயர்தர மாணவரே உயிரிழந்துள்ளார்.
கண்டி-திகன வீதியில் உள்ள பல்லேகலே இராணுவ முகாமுக்கு முன்பாக, திகனவிலிருந்து வந்த பேருந்துடன் மாணவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் மோதியதில், பேருந்தின் அடியில் இருவரும் சிக்கி காயமடைந்ததாக கூறப்படுகின்றது.
இச்சம்பவம் குறித்து பல்லேகலே பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஷமீந்திர ராஜபக்ச மற்றும் கபில சந்திரசேனவின் மனைவிக்கு பிடியாணை! விமான நிலைய அதிகாரிகளுக்கு சென்ற உத்தரவு