நாடாளுமன்ற மின்கட்டண நிலுவை விவகாரம்: விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ள காஞ்சன விஜேசேகர
நாடாளுமன்றம் மற்றும் ஜனாதிபதி அலுவலகம் என்பவற்றில் பாரிய மின்கட்டண நிலுவை இருப்பதாக தெரிவிக்கப்படும் கருத்துக்களை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர மறுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் நேற்றைய தின (23.01.2024) அமர்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நாடாளுமன்றம் மற்றும் ஜனாதிபதி அலுவலகம் என்பவற்றில் பாரிய மின்கட்டண நிலுவை இருப்பதாக மின்சார சபை ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜயலால் அண்மையில் குற்றம் சாட்டியிருந்தார்.

குற்ற விசாரணை
மேலும், அவரது உரையை மேற்கோள் காட்டி சமீப நாட்களில் ஊடகங்களிலும் அது தொடர்பான செய்திகள் வெளியாகியிருந்தன.

நாடாளுமன்றத்தின் சிறப்புரிமையை மீறும் வகையில் பொய்யான தகவல்களை மக்கள் மயப்படுத்திய குற்றத்துக்காக ரஞ்சன் ஜயலாலை, நாடாளுமன்ற சிறப்புரிமைக்குழுவின் முன் அழைத்து விசாரிக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan
கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri
திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்; அதிமுக கூட்டணியில் டிடிவி - அதிர்ச்சியில் விஜய் News Lankasri