இலங்கையின் தேசியப் பாதுகாப்பு குறித்து பாதுகாப்பு செயலாளர் வெளிப்படுத்தியுள்ள தகவல்
நாட்டின் தேசியப் பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தல்களும் கிடையாது என பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன தெரிவித்துள்ளார்.
தேசியப் பாதுகாப்பு என்பதற்கான வரைவிலக்கணத்தை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மஹரகம பிரதேசத்தில் பாடசாலை நிகழ்வு ஒன்றில் வைத்து உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஒரு சில இடங்களில் படுகொலைச் சம்பவங்கள் இடம்பெறுவதனால் தேசியப் பாதுகாப்பிற்கு குந்தகம் ஏற்படாது.
அந்நிய நாடொன்றினால் தாக்குதல், பயங்கரவாத அச்சுறுத்தல், கோவிட் பெருந்தொற்று போன்ற நோய் நிலைமைகளினால் மக்கள் பலர் செத்து மடிதல், இயற்கைப் பேரழிவுகளினால் மக்கள் செத்து மடிதல் போன்ற நிலைமைகள் தேசியப் பாதுகாப்பு பிரச்சினையாக கருதப்பட முடியும்.
ஒப்பீட்டளவில் பாதாள உலகக் குழு செயற்பாடுகள் மிகவும் குறைந்த எண்ணிக்கைக்கு வரையறுக்கப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் இடம்பெறும் சம்பவங்களை தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் நிலைமையாக கருத முடியாது. அது எல்லா நாடுகளிலும் இடம்பெறக்கூடியவை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
வசூல் வேட்டையில் சமந்தாவின் 'எங்கள் தங்கம்' திரைப்படம்.. 3 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan