கோர விபத்தில் பலியான நெருங்கிய தோழிகள் - பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்
களுத்துறை தொடருந்து நிலையத்திற்கு அருகில் தொடருந்தில் மோதி உயிரிழந்த இரு பெண்கள் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேற்று அதிகாலை ( 16) அநுராதபுரம் நோக்கி தொடருந்தில் பயணிப்பதற்காக, தாய், மகள் மற்றும் தாயின் தோழி ஆகியோர் களுத்துறை தெற்கு தொடருந்து நிலையத்தின் வலது பக்கமாக நடைமேடைக்கு வருவதற்காக தொடருந்து பாதையில் நடந்து சென்று கொண்டிருந்தபோதே இருவரும் தொடருந்தில் மோதி உயிரிழந்தனர்.
உயிரிழந்த பெண்கள்
தொடருந்து தண்டவாள பழுதுபார்ப்பு பணிகளுக்காக பயன்படுத்தப்பட்ட பொருட்களை ஏற்றிச்சென்ற தொடருந்தே அவர்கள் மீது மோதியுள்ளது.

இந்த விபத்தில் குருகே ஸ்ரீயானி, ரேணுகா தமயந்தி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து தொடர்பில் உயிரிழந்த ஸ்ரீயானியின் மகள் சித்துமினி ஜெயநெத்தி சாட்சியமளிக்கையில்,
இந்த விபத்தில் உயிரிழந்தவர் என் தாயார், இரண்டாவது குருகே ஸ்ரீயானி. நாங்கள் ஒரு நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதற்காக அநுராதபுரம் செல்லவிருந்தோம். அந்த பயணத்தில் என் தாயார், நான், மற்றும் என் தாயாரின் தோழி ரேணுகா அத்தையும் சென்றோம்.
16 ஆம் திகதி அதிகாலையில் களுத்துறையில் பேருந்திலிருந்து இறங்கினோம். பிறகு, வயல்வெளி வழியாக தொடருந்து தண்டவாளம் வரை நடந்தோம். அந்த நேரத்தில் தொடருந்து வரும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. நாங்கள் தொடருந்து தண்டவாளம் வழியாக தொடருந்து நிலையத்தை நோக்கி நடந்தோம். என் அம்மா தொடருந்து வருவதாக சொன்னபோது, தொடருந்து அருகில் இருந்தது. நான் எனது இரண்டு பைகளையும் நடைமேடையில் வீசிவிட்டு, இரு கைகளாலும் அதன் மீது ஏறினேன்.
என் அம்மாவையும் ரேணுகா அத்தையும் தூக்க முயன்றேன், ஆனால் முடியவில்லை. அதற்கு நேரமில்லை. என் அம்மாவும் ரேணுகா அத்தையும் நடைமேடையைக் கட்டிப்பிடித்துக்கொண்டனர். அந்த நேரத்தில், அவர்கள் இருவரும் தொடருந்தில் மோதி வெகுதூரம் தூக்கி வீசப்பட்டனர் என தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து களுத்துறை போதனா வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட பிரேத பரிசோதனையில், தொடருந்து மோதலில் ஏற்பட்ட பலத்த காயங்களே மரணங்களுக்கு காரணம் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
நாட்டிலிருந்து நள்ளிரவில் அவசரமாக வெளியேறிய ஷிரந்தி ராஜபக்ச! ராஜபக்ச குடும்பத்திற்கு தொடரும் சிக்கல்