கல்முனை வடக்கு பிரதேச செயலக நிருவாக உரிமை மீட்பு போராட்டம்: இன நல்லுறவை வெளிப்படுத்திய மக்கள்
அம்பாறை(Ampara) - கல்முனை வடக்கு பிரதேச செயலக நிருவாக உரிமை மீட்பு போராட்ட களத்தில் போராட்டத்திற்கு மத்தியிலும் இன நல்லுறவை வளர்க்கும் செயற்பாடு ஒன்றை மக்கள் முன்னெடுத்துள்ளனர்.
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் நிருவாக உரிமை மீட்பு போராட்டம் 62 நாட்களைக் கடந்தும் எழுச்சியுடன் இடம்பெற்று வருகின்ற நிலையில், போராட்டக் களத்தில் வெஷாக் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
தன்சல் நிகழ்வு
அதனடிப்படையில், வெசாக் தினத்தன்று(23) குளிர்பானம், பிஸ்கட் என்பன வழங்கி வெசாக் தினத்தினைச் சிறப்பித்ததுடன் இன்றைய தினமும்(26) மரவள்ளிக் கிழங்கு அவியல் போராட்ட களத்திலும், அந்த வீதியூடாக பயணம் மேற்கொள்ளும் மக்களுக்கும் பரிமாரப்பட்டுள்ளன.
மேலும், இன நல்லுறவை வெளிப்படுத்தும் நோக்கத்துடன் நடைபெற்றுள்ள இந்த நிகழ்வில் அதிகளவிலான பொதுமக்களும் கலந்து கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |