கல்லோயா நீர்பாசன மறுசீரமைப்பு திட்டம் உத்தியோகபூர்வமாக ஆரம்பம்!
அம்பாறை மாவட்டத்தில் 900 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் நீர்பாசன மறுசீரமைப்பு திட்டம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
நீர்ப்பாசன மறுமலர்ச்சி அம்பாறை மாவட்ட விவசாயிகளுக்கான நீர்ப்பாசன மறுமலர்ச்சிக்காக 'நீர்ப்பாசனத்தின் மகத்துவம் எமது உரிமை' எனும் தொனிப்பொருளிற்கமைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்காவின் சிந்தனையில் இன்று (05) இந்த திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
காலநிலை மாற்றம் மற்றும் மனித செயற்பாடுகள் காரணமாக கல்லோயா ஆற்றின் பள்ளத்தாக்குகளில் சிறு மழை பொழிந்தாலும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுகிறது.
பெரும் செலவு
இதனால் மாவட்ட விவசாயிகளின் பயிர்கள் சேதம் அடைந்து விளைச்சலிலும் குறைவினை ஏற்படுத்தியுள்ளதோடு இவ் இழப்பினை ஈடு செய்ய ஆண்டுதோறும் பெரும் செலவு ஏற்படுகிறது.
எனவே இவ்வாறான நிலைமைகள் எதிர்காலத்தில் ஏற்படாமல் இருப்பதற்காக அரசாங்கமானது கல்லோயா மறுசீரமைத் திட்டத்தினை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்போது விவசாயம் கால்நடை காணி நீர்ப்பாசனம் அமைச்சர் கே.டி லால்காந்த , கிராமிய அபிவிருத்தி சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ , அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசத்தின் அபிவிருத்தி குழு தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவா, அம்பாறை மாவட்ட செயலாளர் சிந்தக அபயவிக்ரம, அம்பாறை மாவட்ட நீர்பாசன திணைக்களத்தின் பணிப்பாளர் பொறியியலாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்கள், செயற்பாட்டாளர்கள் அம்பாறை மாவட்ட விவசாய சங்கத்தினர்கள், அம்பாறை மாவட்ட விவசாயிகள் அத்துடன் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.










சர்ச்சைகளுக்கு நடுவில் குட் நியூஸ் சொன்ன ரவிமோகன்.. ஆடிப்போன திரையுலகம்- குவியும் வாழ்த்துக்கள் Manithan

அமெரிக்கா, சீனாவின் மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தல்: 3.5 பில்லியன் தங்கம் டெபாசிட் கண்டுபிடிக்கப்பட்ட நாடு News Lankasri

பாகிஸ்தான், சீனாவுக்கு மேலும் ஒரு கெட்ட செய்தி... ET-LDHCM ஏவுகணையை சோதிக்க தயாராகும் இந்தியா News Lankasri

தக் லைஃப் படத்தில் சிம்பு ரோலில் முதன் முதலில் நடிக்கவிருந்த நடிகர் யார் தெரியுமா! அட இவரா Cineulagam
