கச்சத்தீவை வழங்க முடியாது: அதில் உடன்பாடு இல்லை - சாள்ஸ் நிர்மலநாதன்
கச்சத்தீவை வழங்க முடியாது அதில் உடன்பாடு இல்லை எனவும் தன்னுடைய நிலைப்பாடு அதுவே என நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்திற்கு விஜயம் மேற்கொண்ட இந்தியப் பிரதமர் மோடியிடம் தமிழக முதலமைச்சர் கச்சத்தீவை மீட்பதற்குரிய பொருத்தமான நேரம் இதுவென கோரிக்கை விடுத்திருந்தார்.
எனவே இது தொடர்பில் வினவிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
வடபகுதி கடற்தொழிலாளர்களின் நிலைப்பாடு

வடக்கு தமிழர்கள் குறிப்பாக கடற்தொழிலாளர்களின் நிலைப்பாடு கச்சத்தீவை வழங்க முடியாது என்பதுவே. அது எங்களுடைய கடற்தொழிலாளர்களுக்கு பாதிப்பாக அமையும். எனவே கச்சத்தீவை வழங்கு முடியாது.
அதற்கான வாய்ப்பு இல்லை. தமிழக முதலமைச்சர்
தமிழக கடற்தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று அவ்வாறு ஒரு கோரிக்கையினை
விடுத்திருக்கலாம். ஆனால் அதற்கான வாய்ப்புக்கள் இல்லை.

தமிழக முதலமைச்சரின் இக் கோரிக்கை தொடர்பில் தமிழக மற்றும் ஈழத்தமிழ் உறவில் பாதிப்புக்கள் ஏற்படாது. ஒரு விடயத்தில் வெவ்வேறு கருத்துக்கள் இருக்கலாம். ஆனால் அது உறவில் பாதிப்பை ஏற்படுத்தாது'' இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்தி
கச்சத்தீவை கைப்பற்றுமாறு ஸ்டாலின் கோரிக்கை - ஒரு வார்த்தை கூட பேசாத மோடி
தமிழ் புத்தாண்டு சிறப்பு திரைப்படம்.. கலைஞர் டிவியில் முதல் முறையாக ஒளிபரப்பாகும் முன்னணி ஹீரோவின் படம் Cineulagam
48 மணி நேரத்தில் நரக மழை பொழியும் - ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri