கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா குறித்து வெளியான தகவல் (Video)
கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா ஆரம்பமாகும் திகதிகள் குறித்து யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் அ.சிவபாலசுந்தரம் தகவல் வெளியிட்டுள்ளார்.
அதன்படி, இத் திருவிழா எதிர்வரும் மார்ச் மாதம் 03ஆம் திகதி மற்றும் 04ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா இம்முறை, யாழ்ப்பாண மாவட்டச் செயலாளரது ஒருங்கிணைப்பின் கீழ், யாழ்ப்பாண ஆயர் இல்லம், இலங்கை கடற்படை, நெடுந்தீவு பிரதேச செயலகம் மற்றும் சம்பந்தப்பட்ட சகல திணைக்களங்களினதும் முழு ஒத்துழைப்புடன் நடைபெறவுள்ளது.
திருவிழா தொடர்பான தகவல்களைப் பொதுமக்களுக்கு யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் அ.சிவபாலசுந்தரம் அறிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில், 2023.03.03 ஆம் திகதி காலை 5 மணி தொடக்கம் மு.ப 10 மணி வரை அரச பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்திலிருந்து குறிக்கட்டுவான் வரை சேவையில் ஈடுபடும். கச்சத்தீவுக்கான படகுச்சேவையானது குறிக்கட்டுவனில் இருந்து காலை 6 மணி முதல் மு.ப 11 மணி வரை சேவையில் ஈடுபடுத்தப்படும்.
குறிகட்டுவனில் இருந்து பயணிக்கும் ஒரு நபருக்கான படகிற்குரிய இரு வழிப் பயணக் கட்டணம் ரூ.2000 ஆகும்.
வெளி மாவட்டங்களிலிருந்து தமது சொந்தப்படகுகளில் திருவிழாவிற்குச் செல்வோர் தமது வசிப்பிடங்களிற்கு அருகிலுள்ள கடற்படை முகாம்களில் தொடர்புகொண்டு உரியக் கடற்பயணப் பாதுகாப்பு அனுமதியினை பெற்றுக்கொள்வதுடன், 2023.03.03 ஆம் திகதி பி.ப 6 மணிக்கு முன்னதாக கச்சத்தீவை வந்தடைவதற்கேற்றவாறு தங்களது பயணங்களை ஆரம்பிக்கவேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
உணவு வழங்கல்
04.03.2023 ஆம் திகதி கச்சத்தீவு உற்சவத்தில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கான காலை உணவானது இலங்கை கடற்படையினரால் வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயமானது யாத்திரிகர்களின் புனிதத் தலமாகவுள்ளதால்
மது பாவனைப்பொருட்கள் கொண்டு செல்லுதல் மற்றும் பாவித்தல் என்பன முற்றாகத் தடை
செய்யப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தான், சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல் - இந்தியா சொந்தமாக உருவாக்கும் பாதுகாப்பு அமைப்பு News Lankasri

பாகிஸ்தானுக்கு புதிய அச்சுறுத்தல்... மிக ஆபத்தான R-37M ஏவுகணைகளை சொந்தமாக்கும் இந்தியா News Lankasri
