கோபா குழுவின் தலைவராக கபீர் ஹாசிமை நியமிப்பதற்கு இணக்கம்
கோபா குழுவின் தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிமை நியமிக்க இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நியமனம் இன்றைய தினம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரசன்ன ரணதுங்கவின் அறிவிப்பு
இந்த விடயத்தை ஆளுங்கட்சியின் பிரதான அமைப்பாளர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இன்றைய தினம் நாடாளுமன்ற அமர்வில் வைத்து அறிவித்துள்ளார்.
அத்துடன் கோப் எனப்படும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு மற்றும் கோபா எனப்படும் அரசாங்க கணக்குகள் பற்றிய குழு ஆகியவற்றின் முதலாவது அமர்வு இன்று இடம்பெறுகிறது.
உறுப்பினர்களில் மாற்றம்
அதன் உறுப்பினர்களில் மாற்றம் மேற்கொள்வது குறித்தும் ஆராயப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில் கபீர் ஹாசிமை குறித்த பதவிக்கு நியமிப்பதற்கு இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.