கோப் மற்றும் கோபா குழுக்களுக்கு உள்வாங்கப்பட்டுள்ள சாணக்கியன், சுரேன் ராகவன்! சபாநாயகர் அறிவிப்பு (Live)
கோப் மற்றும் கோபா ஆகிய குழுக்களுக்கான உறுப்பினர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்ற அமர்வு இன்றைய தினம் காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகியிருந்தது.
இந்த நிலையில் அமர்வு ஆரம்பத்தின் போது சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன குழுக்களுக்கான உறுப்பினர்களின் பெயர் விபரங்களை சபைக்கு அறிவித்துள்ளார்.
கோப் குழு
அதன்படி, அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவான கோப் குழுவுக்கு 27 உறுப்பினர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்.

குறித்த குழுவில் ரவூப் ஹக்கிம், எஸ்.எம்.எம்.முஸாரப், எஸ்.எம் மரிக்கார், முஜிபுர் ரஹ்மான் மற்றும் இராசமாணிக்கம் சாணக்கியன் ஆகியோரும் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
கோபா குழு
அத்துடன் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவான கோபாவுக்கு 27 உறுப்பினர்களும் பெயரிடப்பட்டுள்ளனர்.

மேலும், அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவான கோபாவில் காதர் மஸ்தான், சுரேன் ராகவன், கபிர் ஹாசிம் மற்றும் இராசமாணிக்கம் சாணக்கியன் ஆகியோர் உள்வாங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முதலமைச்சர் மகனை திருமணம் செய்துகொண்ட நடிகை.. 11 நாட்களில் இறந்த கணவர்! இவர் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா Cineulagam
12 கிலோ உடல் எடை குறைத்த நடிகை மைனா நந்தினி.. அதற்கு காரணமான 3 சீக்ரெட் விஷயங்கள் என்ன தெரியுமா, இதோ.. Cineulagam