கனடா பிரதமர் ட்ரூடோ பயணித்த விமானத்தில் ஏற்பட்ட கோளாறு
கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ பயணித்த விமானத்தில் பல சந்தர்ப்பங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கனேடிய பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ தனது குடும்பத்தினருடன் கடந்த டிசம்பர் மாதம் 26ஆம் திகதி விடுமுறைக்காக ஜமைக்கா நாட்டிற்குச் சென்றிருந்தார்.
விமானத்தில் திடீர் கோளாறு
இந்நிலையில் பயணம் முடிந்து ஜனவரி 4ஆம் திகதி அவர் கனடா திரும்புவதாக திட்டமிடப்பட்டிருந்தது.
இதையடுத்து, ஜனவரி 3ஆம் திகதி அவரது விமானத்தை தயார் செய்வதற்காக அதை பரிசோதித்த பராமரிப்புக் குழுவினர், விமானத்தில் பழுது இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.

இதன் போது பழுதை சரிசெய்வதற்கான குழுவுடன் மற்றொரு விமானம் ஜமைக்கா நாட்டிற்குச் சென்றதுடன் பழுது பார்க்கப்பட்டதும் இரு விமானங்களும் ஜனவரி 4ஆம் திகதி கனடா திரும்பின.
அத்துடன் கடந்த நான்கு மாதங்களுக்குள் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பயணித்த விமானம் இரண்டு முறை பழுதாகியுள்ளது.
ஏற்கனவே, ஜி20 மாநாட்டுக்காக இந்தியா வந்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, மாநாடு முடிந்து திரும்புகையில் செல்லவேண்டிய விமானத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈஸ்வரி மருத்துவ செலவு இத்தனை லட்சமா, குணசேகரன் புதுபிளான், தர்ஷினி அதிரடி... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
பிரிட்டிஷ் விமானப் படை தளத்தின் மீது தாக்குதல்: அதிநவீன போர்க்கப்பலை அனுப்ப பிரித்தானிய திட்டம் News Lankasri
ஏழு மாதங்கள் மகா பெரிய போர்... அச்சத்தை உருவாக்கியுள்ள பிரெஞ்சு ஜோதிடக்கலைஞரின் கணிப்பு News Lankasri