தலைமன்னார் கடற்பரப்பில் கைதான 8 இந்திய கடற்றொழிலாளர்களுக்கு விளக்கமறியல்
இலங்கை கடற்பரப்பினுல் சட்ட விரோதமாக நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட நிலையில் தலைமன்னாரில் கைது செய்யப்பட்ட இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தை சேர்ந்த 8 கடற்றொழிலாளர்களையும் அடுத்த மாதம் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த உத்தரவினை இன்று (27.08.2024) மன்னார் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
மேலதிக விசாரணைகள்
இலங்கை கடற்பரப்பினுல் நேற்று (26) இரவு சட்ட விரோதமாக ஒரு விசைப் படகுடன் நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 8 கடற்றொழிலாளர்களையும் கடல் ரோந்து பணியில் ஈடுபட்ட கடற்படையினர் கைது செய்து தலைமன்னார் கடற்படையிடம் ஒப்படைத்தனர்.
இந்நிலையில் தலைமன்னார் கடற்படையினர் கடற்றொழிலாளர்களிடம் முன்னெடுத்த விசாரணைகளை தொடர்ந்து இன்று (27) மதியம் மேலதிக நடவடிக்கைகளுக்காக மன்னார் மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் மேலதிக விசாரணைகளின் பின்னர் இன்று (27) மாலை மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.
இதன் போது விசாரணைகளை முன்னெடுத்த மன்னார் நீதவான் அவர்களை அடுத்த மாதம் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |




காணி நிலம் வேண்டும் பராசக்தி 3 நாட்கள் முன்

சமீபத்தில் திருமணம் செய்த தொகுப்பாளினி பிரியங்காவிற்கு இப்படியொரு சோகமா?... அவரே வெளியிட்ட போட்டோ Cineulagam

Optical illusion: உங்கள் கண்களுக்கு உயிர் உள்ளது எனில் இதில் இருக்கும் நேரான “28” எங்கே உள்ளது? Manithan

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சீதா, அருணை கண்டதும் முத்து செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam

மற்றொரு ஐரோப்பிய நாடு... 10,000 ரஷ்ய வீரர்கள்: பிரதமர் ஒருவர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் News Lankasri

இந்தியாவிற்கு சிக்கலை ஏற்படுத்தும் நகர்வு... வங்கதேசத்தில் ஆயுதங்களை தயாரிக்க துருக்கி முடிவு News Lankasri
