ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் தாயார் காலமானார்
சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் தாயார் காலமானார்.
ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் தாயார் லில்லி திரேஸ் கனடாவில் வசித்து வந்த நிலையில், தமது 80ஆவது வயதில் நேற்று காலமானதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.
இறுதிக் கிரியைகள் தொடர்பான தகவல் பின்னர் அறிவிக்கப்படவுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இருந்து துணிச்சலுடன் பணியாற்றிவந்த ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன், 2000 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி சுட்டுக்கொல்லப்பட்டார்.
இதனையடுத்து அச்சம் காரணமாக நிமலராஜனின் குடும்ப உறுப்பினர்கள், நாட்டை விட்டு வெளியேறி கனடாவில் குடியேறியமை குறிப்பிடத்தக்கது.