மொட்டுக்கட்சியை நம்பி ஏமாந்தவர்கள் திரும்பி வரலாம்! சுதந்திரக் கட்சி அறிவிப்பு
கடந்த காலத்தில் மொட்டுக் கட்சியை நம்பி அதன் பின்னால் சென்ற ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் அரசியல்வாதிகளை மீண்டும் தாய்க்கட்சியில் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின்(Sri Lanka Freedom Party )பொதுச் செயலாளர், முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க(Duminda Dissanayake) கொழும்பில் நேற்று(2) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் குறித்த அழைப்பை விடுத்துள்ளார்.
சுதந்திரக் கட்சி அறிவிப்பு
அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஏராளமான முன்னாள் அரசியல்வாதிகள் கடந்த காலத்தில் மொட்டுக் கட்சியை நம்பி அதன் பின்னால் சென்றிருந்தனர்.
இதன் காரணமாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஓரளவுக்கு பலவீனமடைந்தது உண்மை. எனினும் மொட்டுக் கட்சிக்கு பின்னால் சென்றவர்களை இன்று அக்கட்சி கைவிட்டுள்ளது.
இன்னும் சிலர் அக்கட்சியில் இருந்து ஒதுங்கிக் கொண்டுள்ளனர் அவ்வாறானவர்கள் இன்று தங்கள் அரசியல் எதிர்காலம் குறித்து எந்தவொரு தெளிவான தீர்மானமும் இன்றி நட்டாற்றில் கைவிடப்பட்ட நிலையில் உள்ளனர் அவர்களை மீண்டும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொள்ளுமாறு நாம் அழைப்பு விடுக்கின்றோம்.
அதன் ஊடாக சுதந்திரக் கட்சியை மீண்டும் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் துமிந்த திசாநாயக்க தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் ஆனந்தி கழுத்தில் தாலி கட்டிய அன்பு... சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam

சிங்கப்பூரில் திடீர் சாலைப் பள்ளம்: காருடன் விழுந்த பெண்ணை., விரைந்து காப்பாற்றிய தமிழர் News Lankasri

அட சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் கோமதி ப்ரியாவா இது... பல வருடங்கள் முன் எப்படி உள்ளார் பாருங்க, Unseen போட்டோ Cineulagam

சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலில் இருந்து இந்த பிரபலம் வெளியேறுகிறாரா?.. ரசிகர்கள் ஷாக் Cineulagam
