சிட்னியில் நடந்த கொடூர சம்பவம்.. அதிகரிக்கும் பலி எண்ணிக்கை
அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள போண்டி (Bondi) கடற்கரையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு குழந்தை உட்பட 16 ஆக உயர்ந்துள்ளது.
நேற்றைய தினம் குறித்த பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், தாக்குதல் நடத்திய 2 பேர் மக்கள் மீது 50 முறை துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிவிக்கப்பட்டது.
குழந்தைகள் படுகாயம்..
முன்னதாக குறித்த தாக்குதலில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 12 பேர் காயமடைந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன.

அவர்களில் துப்பாக்கிதாரி ஒருவரும் கொல்லப்பட்டதாகவும் மற்றொருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது உயிரிழந்தவர்களில் துப்பாக்கிதாரியும் இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
அதேவேளை, குறித்த துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து மிக மோசமாக காயமநை்த நிலையில் நான்கு குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவை உலுக்கிய பயங்கரவாத தாக்குதல்! மர்ம நபரிடம் துப்பாக்கியை பறித்த நபர் (காணொளி) News Lankasri