கொழும்புத் துறைமுகத்தில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட வெடிப்பு!
கொழும்புத் துறைமுகத்தில் கடலுக்கு அடியில் அமைக்கப்பட்டிருக்கும் எரிபொருள் குழாயில் ஏற்பட்ட வெடிப்பில் எரிபொருள் பெருமளவு கடலில் கலந்துள்ளதாக இலங்கை கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை (Marine Environment Protection Authority - MEPA) தெரிவித்துள்ளது.
இன்று (14.12.2025) அதிகாலை 3.00 மணிக்கு கொழும்பு துறைமுகத்திற்கு மேற்கு பகுதியில் ஆழ் கடலில் பொற்றோலியம் கூட்டுத்தாபனத்துக்கு எண்ணெய்க் கப்பல்களில் இருந்து எரிபொருள் விநியோகிக்கும் குழாயிலேயே வெடிப்பு ஏற்பட்டுள்ளது.
வெடிப்பு ஏற்பட்ட விதம்

ஆழ்கடலில் தான் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இலங்கை கடற்படையால் அதிரடியாக மூடப்பட்டு,எண்ணெய் கசிவது நிறுத்தப்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுக அதிகாரசபை-கடலோர பாதுகாப்பு படை மற்றும் தீயணைப்பு படைகள்-பொற்றோலியம் கூட்டுத்தாபனம் ஆகிய இணைந்து கசிந்த அநேக எண்ணெய் சேகரிக்கப்பட்டுள்ளது.
வீசப்பட்டிருக்கும் மிகுதி எண்ணெய்யை எடுப்பதற்கு தொழில்நுட்ப செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.இதனால் கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் எந்த உயிரினங்களுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரியவருகிறது.
காணாமல் போகும் கோமதி.. மகன்களிடம் ரூ. 10 லட்சத்தை திரும்ப கேட்ட பாண்டியன்.. அடுத்து பாண்டியன் ஸ்டோர்ஸில் நடக்கப்போவது இதுதான் Cineulagam
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri
துபாயில் ICU-வில் தாய்: இந்தியா வர ரூ 50 லட்சம் கேட்கும் ஏர் ஆம்புலன்ஸ்: தவிக்கும் தமிழர் News Lankasri
குறிவைக்கப்பட்ட ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்: அதிரடி தாக்குதல் நடத்திய உக்ரைன் News Lankasri