போதகர் ஜெரோம் பெர்ணான்டோவுக்கும் நாவலப்பிட்டி மக்களுக்கும் இடையில் முறுகல்
நாவலப்பிட்டியில் சிறுவர்களுக்கான புனர்வாழ்வு நிலையத்தை நிர்மாணிப்பதற்காக, வருகை தந்த போது போதகர் ஜெரோம் பெர்னாண்டோவின் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் கிராம மக்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
புனர்வாழ்வு நிலையத்துக்கு பதிலாக போதகர் ஜெரோம், ஒரு மத தலத்தை நிர்மாணிக்க திட்டமிட்டுள்ளதாக குற்றம் சுமத்தியே கிராம மக்கள், ஜெரோமின் பாதுகாப்பு அதிகாரிகளுடன் முரண்பட்டுள்ளனர்.
பொலிஸாரின் தடையீடு
இதனையடுத்து, நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர பொலிஸார் தலையிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில், பெரும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் போதகர் ஜெரோம் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
முன்னதாக, பௌத்த மத நிந்தனை என்ற குற்றச்சாட்டின் பேரில், போதகர் ஜெரோம் பெர்ணான்டோ, கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஐரோப்பிய நாடொன்றுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்: வர்த்தகத்தை நிறுத்த அமெரிக்கா திட்டம் News Lankasri
ஏழு மாதங்கள் மகா பெரிய போர்... அச்சத்தை உருவாக்கியுள்ள பிரெஞ்சு ஜோதிடக்கலைஞரின் கணிப்பு News Lankasri
மூன்று முடிச்சு சீரியலில் ஹீரோவாக நடிக்கும் நியாஸ் கான் வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா Cineulagam