போதகர் ஜெரோம் பெர்ணான்டோவுக்கும் நாவலப்பிட்டி மக்களுக்கும் இடையில் முறுகல்
நாவலப்பிட்டியில் சிறுவர்களுக்கான புனர்வாழ்வு நிலையத்தை நிர்மாணிப்பதற்காக, வருகை தந்த போது போதகர் ஜெரோம் பெர்னாண்டோவின் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் கிராம மக்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
புனர்வாழ்வு நிலையத்துக்கு பதிலாக போதகர் ஜெரோம், ஒரு மத தலத்தை நிர்மாணிக்க திட்டமிட்டுள்ளதாக குற்றம் சுமத்தியே கிராம மக்கள், ஜெரோமின் பாதுகாப்பு அதிகாரிகளுடன் முரண்பட்டுள்ளனர்.
பொலிஸாரின் தடையீடு
இதனையடுத்து, நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர பொலிஸார் தலையிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில், பெரும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் போதகர் ஜெரோம் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
முன்னதாக, பௌத்த மத நிந்தனை என்ற குற்றச்சாட்டின் பேரில், போதகர் ஜெரோம் பெர்ணான்டோ, கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிரிட்டிஷ் விமானப் படை தளத்தின் மீது தாக்குதல்: அதிநவீன போர்க்கப்பலை அனுப்ப பிரித்தானிய திட்டம் News Lankasri
உதவி செய்த மீனாவையே பிரச்சனையில் சிக்க வைத்த மயில், என்ன இப்படி பண்ணிட்டாங்க... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
ஐரோப்பிய நாடொன்றுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்: வர்த்தகத்தை நிறுத்த அமெரிக்கா திட்டம் News Lankasri
திடீரென கண்ணீர்விட்டு அழுத சோழன், அதைப்பார்த்த நிலா செய்த விஷயம்.. அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam