இனி கடவுளால் மட்டுமே இலங்கையை காப்பாற்ற முடியும்! வெளிநாட்டிலிருக்கும் நண்பருக்கு செய்தி அனுப்பிய ஜயசுந்தர
ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர் பீ.பி. ஜயசுந்தர,(P.B Jayasundara) தனது பதவியில் இருந்து விலகுவதற்கு சில நாட்களுக்கு முன்னர், தனக்கு நெருக்கமான நண்பர் ஒருவருக்கு சர்ச்சைக்குரிய வட்ஸ் அப் செய்தியை அனுப்பியுள்ளதாக தெரியவருகிறது.
அந்த நெருக்கமான நண்பர் தற்போது வெளிநாட்டில் இருக்கின்றார். ஜயசுந்தர பதவி விலகும் செய்தியை அறிந்து இலங்கையில் என்ன நடக்கின்றது என வட்ஸ் அப் தகவல் மூலம் வினவியுள்ளார்.
இதற்கு ஆறு வார்த்தைகள் கொண்ட குறுகிய பதிலை ஜெயசுந்தர அனுப்பியுள்ளார். ஆறு வார்த்தைகள் என்ற போதிலும் அவற்றில் மிகப் பாரதூரமான அர்த்தங்கள் அடங்கி இருக்கின்றது.
‘Only god can save our country’ என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் தமிழ் அர்த்தம் கடவுளால் மட்டுமே எமது நாட்டை காப்பாற்ற முடியும் என்பதாகும்.
ஜனனி உயிருடன் இருப்பதை அறிந்து அதிர்ச்சியடையும் குணசேகரன்.. எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான்.. Cineulagam
மூத்த இராணுவ உளவுத்துறை அதிகாரியை சுட்டவர்..அமீரகத்திற்கு தப்பிச்சென்ற நிலையில் துபாயில் கைது News Lankasri