இலங்கையின் சுகாதார சேவைக்கு ஜப்பான் வழங்கிய பாரிய உதவி
இலங்கையின் சுகாதார அமைப்புக்கு ஆதரவு வழங்கும் முகமாக ஜப்பான் 40,000 மெட்ரிக் தொன் டீசல் எரிபொருளை மானியமாக வழங்கியுள்ளது.
கொழும்பு துறைமுகத்தில் இன்று (19.02.2024) நடைபெற்ற வைபவத்தின் போது, இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகியினால் இந்த உதவித்தொகை உத்தியோகபூர்வமாக சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த நன்கொடை நாடு முழுவதும் அத்தியாவசிய மருத்துவ சேவைகளுக்கு தடையின்றி போக்குவரத்து வசதியினை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
வெளிப்படையான அமைப்பு
மேலும், திறமையான மற்றும் பொறுப்பான எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்வதற்காக, ஒரு வெளிப்படையான அமைப்பு நிறுவப்பட்டுள்ளது.
இதன்படி, இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்துடன் நெருக்கமான ஒத்துழைப்புடன் விநியோக செயல்முறை மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.
மேலும், ஜப்பானிய அரசாங்கத்தால் நன்கொடையளிக்கப்பட்ட எரிபொருளின் சரியான பயன்பாட்டை உறுதிசெய்து, தொடர்புடைய அனைத்து நடவடிக்கைகளையும் நேரடியாகக் கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

விஜய் டிவியில் மீண்டும் ஒளிபரப்பாக போகும் பழைய ஹிட் சீரியல்கள்.. எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam

Falcon 2000 ஜெட் விமானங்களை இந்தியாவில் தயாரிக்கும் அனில் அம்பானி., பிரெஞ்சு நிறுவனத்துடன் கூட்டணி News Lankasri
