கைதிக்கு போதைப்பொருள் வழங்க உடந்தையாக இருந்த சிறை அதிகாரி கைது
கைதி ஒருவருக்குப் போதைப்பொருளை வழங்குவதற்குப் பெண் ஒருவருக்கு உடந்தையாக இருந்தார் எனக் கூறப்படும் சிறைச்சாலை அதிகாரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
களுத்துறை சிறைச்சாலையிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
வஸ்கடுவ பிரதேசத்தில் வசிக்கும் 53 வயதுடைய சிறைச்சாலை அதிகாரியே கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது
களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவருக்கு ஐஸ், ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருட்களும் கையடக்கத் தொலைபேசியையும் கொடுக்க முயன்ற பெண் ஒருவர் சிறைச்சாலை அதிகாரிகளால் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார்.

கைது செய்யப்பட்ட பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அதே சிறைச்சாலையில் கடமையாற்றும் சிறைச்சாலை அதிகாரி ஒருவர் கைதிக்குப் போதைப்பொருட்களை கொடுக்க உடந்தையாக இருந்தார் எனவும், அவருக்கு 35 ஆயிரம் ரூபா பணம் வழங்கப்பட்டது எனவும் தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணை
இதனையடுத்து சந்தேகநபரான சிறைச்சாலை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை வடக்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
போலீசாரால் கைது செய்யப்பட்ட பல்லவன், ஷாக்கில் சகோதரர்கள்... அய்யனார் துணை பரபரப்பு புரொமோ Cineulagam
தங்களது மனைவியுடன் அய்யனார் துணை சீரியல் சகோதரர்கள்... என்ன செய்துள்ளார்கள் பாருங்க, கலாட்டா கன்பார்ம் Cineulagam
சரவணன் சொன்ன வார்த்தை குமுறலில் மயில் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கான மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட் Cineulagam