வெளிநாடு ஒன்றில் வாகன விபத்தில் உயிரிழந்த யாழ். இளைஞன்
தொழில் நிமிர்த்தம் வெளிநாடு சென்ற யாழ். இளைஞன் ஒருவர் வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார்.
வெளிநாடு சென்று வெறும் 26 நாட்கள் மாத்திரமேயான நிலையில் யாழ்ப்பாணம் அல்வாய் மனோகரா பகுதியைச் சேர்ந்த குறித்த இளைஞன்(24வயது) உயிரிழந்துள்ளார்.
யாழ். நவக்கிரியை பூர்வீகமாகக் கொண்ட குறித்த இளைஞன் அல்வாய் மனோகரா பகுதியில் வசிக்கும் பெண்ணொருவரை மூன்று வருடங்களுக்கு முன்னதாக திருமணம் செய்துள்ளார்.
இறுதி கிரியை
இந்நிலையில் ஒரு பிள்ளையின் தந்தையான அவர் தொழில் நிமிர்த்தம் கட்டார் நாட்டுக்கு சென்றிருந்த நிலையில் அங்கு இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், சடலம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு இறுதி கிரியைகள் நேற்று மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பாகிஸ்தானுக்கு பெரும் சிக்கல்.... 200 கி.மீ நீள கால்வாய்: தண்டிக்க திட்டமிடும் இந்தியா News Lankasri

6 மாடி கட்டிடத்தின் ரகசிய அறை: பெரும் பணக்காரர்கள் பாதுகாக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri
