முடிவுக்கு வந்த யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் உணவுத்தவிர்ப்பு போராட்டம்
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இரண்டு நாட்களாக முன்னெடுத்து வந்த உணவுத்தவிர்ப்பு போராட்டமானது நேற்றையதினம்(25.01.2025) முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
விதிகளுக்குப் புறம்பாக நடைபெறும், நடைபெற்ற மாணவர்கள் மீதான விசாரணைகளை உடன் நிறுத்து, போராடுதல், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் உள்ளிட்ட மாணவர்களின் அடிப்படை உரிமைகளை உறுதி செய், விரிவுரையாளர்கள் மீதான முறைகேடுகளையும் பாரபட்சமின்றி விசாரணை செய், மாணவர்களின் கற்றலிற்கான சுதந்திரத்தை உறுதி செய்து மாணவர்களிற்கு உடனடி நிவாரணம் வழங்கு ஆகிய நான்கு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து தீர்வு கிடைக்கும் வரை உணவுத்தவிர்ப்புப் போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டு வந்தனர்.
போராட்டம் முடிவு
இந்நிலையில், அந்த பிரச்சினைகள் குறித்த தீர்வு வழங்குவதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக பேரவையினர் உறுதியளித்துள்ளனர்.

இதனையடுத்தே, குறித்த போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
10 ஆண்டுகள் கழித்து சொந்த ராசியில் நுழையும் ராகு! பணத்தை மூட்டைகளில் அள்ளப்போகும் 3 ராசிகள் Manithan
உலகின் மிகப்பெரிய போர் கப்பலைக் களமிறக்கிய ட்ரம்ப்... எதிர்க்கத் தயாராகும் ஒரு குட்டி நாடு News Lankasri
அபிநய் இறந்துவிட்டார் என கூறியபோது உறவினர்கள் செய்த செயல்... பிரபலம் பகிர்ந்த சோகமான தகவல் Cineulagam