தமிழர் தாயகத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்படும் விகாரைகள்! பொலிஸாரின் அராஜகத்திற்கு கண்டனம்
தமிழர் தாயகத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள தையிட்டி விகாரையை அகற்றக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பொலிஸார் கண்மூடித்தனமாக தாக்கி 9 பேரை கைது செய்தமையை வன்மையாக கண்டிப்பதுடன், வடகிழக்கில் விகாரை அமைப்பு காணி அபகரிப்புக்கு எதிராக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் போராட்டம் தொடரும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பிலுள்ள கட்சி காரியாலயத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (23.05.2023) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள விகாரை திறக்கப்படவுள்ள நிலையில் அதனை அகற்றக்கோரி கட்சியின் பொது செயலாளரும், பா.உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தலைமையில் கட்சி உயர்பீட உறுப்பினர்கள் மற்றும் காணி உரிமையாளர்கள், பொதுமக்கள் ஒன்றிணைந்து எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது பொலிஸார் மிக மோசமாக அவர்களை தாக்கியதுடன் சட்டத்தரணி சுகாஷ், திலீபன், தீசன், ராஜீப், சுதாகரன், கோபி, சற்குணதேவி, தமிழ்மதி, ராஜீ கலைவாணி உட்பட 9 பேரை பலாலி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
உண்மையிலே இந்த நாட்டிலே ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்பட்டுள்ளதுடன் தமிழ் தாயத்தில் விகாரைகள் முளைக்க ஆரம்பித்துள்ளது.
தமிழர்களுக்கு சொந்தமான நிலங்கள்
கடந்த வாரம் திருகோணமலையில் தமிழர்களுக்கு சொந்தமான முருகன் ஆலயத்துக்கு சொந்தமான காணியில் தாய்லாந்தில் இருந்து கொண்டுவரப்பட்ட புத்தர் சிலை வைக்க ஏற்பாடு செய்தனர். அதற்கு எதிராக மக்களுடன் ஒன்றினைந்து போராடி அதனை தற்காலிகமாக தடுத்து வைத்திருக்கின்றோம்.
வடக்கு, கிழக்கில் விகாரை அமைப்பது மற்றம் காணி அமைக்கும் செயற்பாடுகளும் துரித கதியில் ஆரம்பிக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டு வருகின்றது. எனவே தமிழர் தாயத்தில் காணி அபகரிப்பு விகாரை அமைப்பது போன்றவற்றை முற்றுமுழுதாக எதிர்ப்போம்.
தமிழ் தாயகம் ஒரு மரபுவழி தாயகம் வடக்கு, கிழக்கில் தமிழர்கள் முஸ்லீம் மக்கள் வாழ்கின்றனர். அவர்களுடைய வணக்கஸ்தலங்கள் இடிக்கப்பட்டு விகாரையை அமைப்பதாக இருந்தால் இந்த நாட்டின் அரசின் இலக்கு என்ன? என்பதை சர்வதேச சமூகம் புரிந்துகொள்ளவேண்டும்.
தமிழர் தாயகத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள குருந்தூர் விகாரை, தையிட்டி விகாரை , திருகோணமலை வில்லூன்றி முருகன் ஆலயத்தில் புத்தர் சிலை வைப்பது, மன்னார் உயிலங்குளத்தில் விகாரை அமைப்பது போன்ற நடவடிக்கை கைவிடப்பட வேண்டும்.
புத்தர் சிலை அமைக்கும் இலக்கு
அதேபோன்று கிழக்கு மாகாணத்தில் பல்வேறு இடங்களில் புத்தர் சிலை அமைக்க இலக்கு வைக்கப்பட்டுள்ளதுடன், தொல்லியல் இடங்கள் என்ற போர்வையில் தமிழ் மக்கள் காணிகள் இலக்கு வைக்கப்பட்டு அபகரிக்கப்படும் செயற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
எனவே இவைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இலங்கை வங்குரோத்து நிலைக்கு சென்றபோது இந்தியா உட்பட பல நாடுகள் கண்மூடிக்கொண்டு உதவிகளை செய்திருக்கின்றனர்.
தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பு யுத்தமே இந்த நாடு இந்த கடன் சுமைக்கு போயுள்ளது. எனவே இந்த நாடு கடன் இல்லாத நாடாக மாற்ற வேண்டுமாக இருந்தால் தமிழ், சிங்கள் மக்களுக்கு இடையிலான இனமுரண்பாடு நீக்கப்பட வேண்டும்.
தமிழ் மக்களின் தேசம் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும். அவ்வாறு அங்கீகரிக்கப்பட்டால் மட்டும் தான் தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ முடியும் என்பதுடன் தமிழ் மக்களுக்கு ஒரு தேசம் அங்கீகரிக்கப்படும் வரை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

மஞ்சள் கயிறு, நெற்றியில் குங்குமம்.. நம்ம இனியாவா இது? தனுஷ் பாடலுக்கு வைப் செய்யும் காட்சி Manithan

சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி News Lankasri

சீன போர்விமானங்களை பயன்படுத்தி பாகிஸ்தான் இந்தியாவின் ரஃபேல் ஜெட்களை வீழ்த்தியது: அமெரிக்க வட்டாரம் உறுதி News Lankasri
