யாழில் ஆசிரியர் தண்டித்ததால் மாணவன் எடுத்த விபரீத முடிவு
யாழில், ஆசிரியர் தண்டித்தமையால் மாணவன் ஒருவர் கிருமிநாசினியை அருந்தியுள்ளார்.
யாழ்ப்பாணம் - புத்தூர் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவன் ஒருவரை அதே பாடசாலையைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் தண்டித்த நிலையில், வீட்டுக்குச் சென்ற மாணவன் இவ்வாறு கிருமி நாசினியை அருந்தியுள்ளார்.
மாணவனை தண்டித்த ஆசிரியர்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
புத்தூர் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் குறித்த மாணவன் ஆசிரியரிடம் அனுமதி பெறாமல் விளையாட்டு நிகழ்வு ஒன்றுக்கு சென்றமையால் ஆசிரியர் மாணவனை தண்டித்துள்ளார்.
அதன் பின்னர் வீடு சென்ற மாணவன் விவசாய தேவைக்காக வீட்டில் வைத்திருந்த கிருமி நாசினியை அருந்திய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
தண்டனை வழங்கிய குறித்த ஆசிரியர் ஏற்கனவே தனியார் கல்வி நிறுவனம் ஒன்றில் மாணவனுக்கு தடியால் தாக்கிய குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டவர் என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விடயம் தொடர்பில் பாடசாலை அதிபருடன் தொடர்பு கொண்ட போது தான் விடுமுறையில் இருப்பதாகவும், ஆசிரியர் மாணவனை திட்டியதாகவும், பின்னர் வீட்டுக்குச் சென்ற மாணவன் கிருமி நாசினியை அருந்தியதை தான் அறிந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தான், சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல் - இந்தியா சொந்தமாக உருவாக்கும் பாதுகாப்பு அமைப்பு News Lankasri

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இந்திய விமானப்படை போர் பயிற்சி: களத்தில் Rafale, Sukhoi-30... News Lankasri
