கடற்தொழிலாளர்களை சாகடிக்கும் புதிய சட்டம்: டக்ளஸ் மீது குற்றச்சாட்டு

Indian fishermen Jaffna Sri Lanka Sri Lanka Fisherman
By Kajinthan Oct 14, 2023 10:21 PM GMT
Report

கடற்தொழிலாளர்கள் பாதிப்பு ஏற்படும் விடயங்களை மேற்கொள்ளமாட்டேன் என கூறிவரும் கடற்றொழில் அமைச்சருக்குத் தெரியாமல் கடற்றொழிளாலர்களை சாகடிக்கும் புதிய சட்டத்திருத்த மூலக் கலந்துரையாடல் இடம் பெற்றதா என தொண்டைமானாறு கடற்றொழிலாளர் சங்கப் பிரதிநிதி நா. வர்ணாகுலசிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.

யாழ்ப்பாணம் - பாசையூர் கடற்றொழிலாளர் சங்க அலுவலகத்தில் நேற்று(14.10.2023) இடம்பெற்ற கடற்றொழிளாலர் அமைப்புகளுடன் கலந்துரையாடலின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கையர் என சந்தேகிக்கப்படும் பெண்கள் இஸ்ரேலில் கைது

இலங்கையர் என சந்தேகிக்கப்படும் பெண்கள் இஸ்ரேலில் கைது


புதிய சட்ட திருத்தம்

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“96 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட கடற்றொழில் சட்டம் 16 சட்டவிரோத தொழில்களை தடை செய்யும் சட்டமாக பயன்பாட்டில் உள்ளது.

குறித்த சட்டத்தினை திருத்துவதற்கான புதிய முன்மொழிவுகளை உள்ளடக்கிய வரைபுடன் கொழும்பிலிருந்து உயர் அதிகாரிகள் கொண்ட குழு அண்மையில் யாழ்ப்பாணம் வருகை தந்தது. சுமார் 360 பக்கங்களைக் கொண்ட வரைபில் 60 பக்கங்கள் மட்டும் தமிழில் பகிரப்பட்ட நிலையில் எஞ்சிய பக்கங்கள் தமிழ் மொழிபெயர்ப்பு கடற்றொழிளாலர் சமூகங்களுக்கு வழங்கப்படவில்லை.

கடற்தொழிலாளர்களை சாகடிக்கும் புதிய சட்டம்: டக்ளஸ் மீது குற்றச்சாட்டு | Jaffna Press Meet Varnakulasingham

இந்திய கடற்றொழிளாலர்களை ஒரு நொடியும் இலங்கை கடல் எல்லைக்குள் தொழில் செய்ய அனுமதிக்க மாட்டேன் என அமைச்சர் கூறுகிறார்.

ஆனால் புதிய சட்ட திருத்தத்தில் கடற்றொழில் சங்கங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் நீக்கப்பட்டு துறை சார் அமைச்சருக்கும் கடற்றொழில் திணைக்களப் பணிப்பாளருக்கும் அதிகாரம் வழங்கப்படுகிறது.

கடற்தொழிலாளர்களை சாகடிக்கும் புதிய சட்டம்: டக்ளஸ் மீது குற்றச்சாட்டு | Jaffna Press Meet Varnakulasingham

அவர்கள் நினைத்தால் கடலில் இந்திய கடற்றொழிளாலர்களை அனுமதிப்பது கடல் எல்லைகளை குறைப்பது தொழில் செய்ய கடற்தொழிலாளர்களின் எண்ணிக்கையை குறைப்பது அதிகரிப்பது என அனைத்து அதிகாரங்களும் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.

நான் அமைச்சரிடம் ஒன்றைக் கேட்க விரும்புகிறேன்,  உங்களுக்கு அறிவிக்காமலா கொழும்பிலிருந்து அதிகாரிகள் யாழ்ப்பாணம் வருகை தந்து குறித்த திருத்த சட்டம் மூலம் தொடர்பில் கலந்துரையாடல் நடத்தினார்கள்.

இந்தியா அத்துமீறிய கடற்றொழிலாளர்களால் வடபகுதி கடற்றொழிளாலர்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இதுவரை அமைச்சரால் தீர்வு ஏதும் முன் வைக்க முடியவில்லை.

இலங்கையர் என சந்தேகிக்கப்படும் பெண்கள் இஸ்ரேலில் கைது

இலங்கையர் என சந்தேகிக்கப்படும் பெண்கள் இஸ்ரேலில் கைது


இவ்வாறான நிலையில் எமது கடற்தொழிலாளர் மக்களை மீண்டும் சாகடிப்பதற்காக புதிய சட்டத்திருத்தத்தை மேற்கொள்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அமைச்சர் சட்டவிரோத சுருக்கு வலைத் தொழிலை கட்டுப்படுத்துகிறேன் என பல தடவைகள் கூறியும் கட்டுப்படுத்த முடிய வில்லை. வடமராட்சி கிழக்கு பகுதியில் தொடர்ச்சியாக சட்ட விரோத சுருக்கு வேலை தொழில் இடம்பெற்று வரும் நிலையில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் சுமார் 50க்கும் மேற்பட்ட படகுகளை பயன்படுத்தி சட்டவிரோத தொழில் செய்து வருகிறார்.

குறித்த நபரின் செயற்பாடுகள் தொடர்பில் துறை சார்ந்த அதிகாரிகளுக்கு தெரிந்த நிலையிலும் நடவடிக்கை எடுக்காததன் பின்னணி என்ன?

கடற்தொழிலாளர்களை சாகடிக்கும் புதிய சட்டம்: டக்ளஸ் மீது குற்றச்சாட்டு | Jaffna Press Meet Varnakulasingham

ஆகவே தற்போது புதிய சட்ட திருத்தம் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளிடம் இடம் பெற்றுவரும் நிலையில் கடற்தொழிலாளர் சங்கங்களின் விருப்பங்கள் இல்லாமல் குறித்த திருத்தத்தை மேற்கொள்ள கூடாது” என அவர் தெரிவித்துள்ளார்.

இக்கலந்துரையாடலில் கலந்து கொண்ட கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவர் எம்.வி.சுப்பிரமணியம் பின்வருமாறு தெரிவித்துள்ளார்.

“ஆகவே மீனவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய புதிய சட்ட திருத்தத்தை கைவிட்டு 96 ஆம் ஆண்டு சட்ட திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதோடு அதனுடன் இணைத்து 2016 ஆம் ஆண்டு இழுவமடிச் சட்டத்தையும்  நடைமுறைப்படுத்த வேண்டும்“ என அவர் தெரிவித்துள்ளார்.

ரஷ்யா - வட கொரியா ஆயுத ஒப்பந்தம்: ஆதாரத்துடன் குற்றம் சுமத்திய அமெரிக்கா

ரஷ்யா - வட கொரியா ஆயுத ஒப்பந்தம்: ஆதாரத்துடன் குற்றம் சுமத்திய அமெரிக்கா

கரையொதுங்கும் கடற்பாசிகள்: அவதியுறும் கடற்றொழிலாளர்கள்

கரையொதுங்கும் கடற்பாசிகள்: அவதியுறும் கடற்றொழிலாளர்கள்

அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

Obersiggenthal, Switzerland, Kirchdorf, Switzerland, Nussbaumen, Switzerland, Mellingen, Switzerland

28 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர் முல்லைப்பிலவு, Berlin, Germany

04 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, இணுவில், கொழும்பு, Scarborough, Canada

30 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், Scarborough, Canada

03 Aug, 2010
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
மரண அறிவித்தல்

திருகோணமலை, மீசாலை கிழக்கு

01 Aug, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை கிழக்கு, London, United Kingdom

29 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஒமந்தை, Birmingham, United Kingdom

23 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Paris, France

25 Jul, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 6ம் வட்டாரம், Ajax, Canada

30 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டியன்தாழ்வு, Niederkrüchten, Germany

01 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Toronto, Canada, Mulhouse, France

02 Aug, 2024
மரண அறிவித்தல்

தையிட்டி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Jul, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US