யாழ். பலாலி வீதி தொடர்பில் முக்கிய அறிவிப்பு
யாழ்ப்பாணம் பலாலி வீதி போக்குவரத்திற்காக காலை 6 மணி முதல் மாலை ஏழு மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை குறித்த வீதியில் பயணம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தது.
மக்கள் விடுத்த கோரிக்கை
அதன்பிறகு, நேரத்தை மாலை 7 மணி வரை நீடித்து தர வேணடும் என யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரனிடம் மக்கள் விடுத்த கோரிக்கையை அடுத்து, இது தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இராணுவ அதிகாரியிடம் கலந்துரையாடப்பட்டு வீதியின் போக்குவரத்து மாலை 7 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 5ஆம் நாள் திருவிழா



