யாழ். பலாலி வீதி தொடர்பில் முக்கிய அறிவிப்பு
யாழ்ப்பாணம் பலாலி வீதி போக்குவரத்திற்காக காலை 6 மணி முதல் மாலை ஏழு மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை குறித்த வீதியில் பயணம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தது.
மக்கள் விடுத்த கோரிக்கை
அதன்பிறகு, நேரத்தை மாலை 7 மணி வரை நீடித்து தர வேணடும் என யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரனிடம் மக்கள் விடுத்த கோரிக்கையை அடுத்து, இது தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இராணுவ அதிகாரியிடம் கலந்துரையாடப்பட்டு வீதியின் போக்குவரத்து மாலை 7 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

300 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் திரிகிரஹி யோகம்.. இனி பண மழை கொட்டுமாம்..அதிர்ஷ்டம் யாருக்கு? Manithan

புத்திகூர்மையுடன் பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க Manithan

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்... நடிப்பவர்கள் யார் யார் பாருங்க Cineulagam
