தமிழக முதலமைச்சர் விஜய்க்கு இலங்கை கடற்றொழிலாளர்கள் சார்பில் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை
யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சம்மேளனங்களின் ஊடக சந்திப்பு யாழ்ப்பாணத்திலுள்ள அலுவலகத்தில் நேற்று(19) இடம்பெற்றது.
தமிழ்நாட்டின் புதிய முதல்வராக பொறுப்பேற்ற ஜோசப் விஜய் தமிழக கடற்றொழிலாளர்கள் எமது கடல் வளத்தை சுரண்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என யாழ் மாவட்ட கடற் தொழிலாளர் கூட்டுறவு சமநிலை தலைவர் அந்தோணி பிள்ளை மாறியதாஸ் கோரிக்கை முன்வைத்தார்.
புதிய முதலமைச்சருக்கு கோரிக்கை
யாழ்ப்பாணத்தில் உள்ள கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க மண்டபத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் தமிழ்நாட்டின் புதிய அமைச்சராக பதவியேற்றுள்ள ஜோசப் விஜய்க்கு கடற்றொழிலாளர் சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு அவரிடம் வினையமாக சில விடயங்களை முன்வைக்க விரும்புகிறோம்.

தமிழ்நாட்டில் இருந்து எல்லை தாண்டும் இந்திய கடற்றொழிலாளர்களால் இலங்கை வடபகுதி கடற்றொழிலாளர்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
எமது கடல் வளத்தை அழிப்பதோடு எமது கடற்றொழிலாளர்களின் பல கோடி பெருமதியான பெறுமதியான வலைகளையும் நாசம் செய்து விட்டார்கள்.
தற்போது மீன்பிடி தடைக்காலம் இடம்பெற்று கொண்டிருக்கின்ற நிலையில் எதிர்வரும் 15 ஆம் திகதியுடன் தடைகாலம் நிறைவடைவதாக அறிகிறோம்.
ஆகவே எமது கடற் பகுதிக்குள் அத்துமீறி உள்நுளையும் இந்திய கடற்றொழிலாளர்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
விபத்து ஏற்பட்டு ரத்த காயத்துடன் வலியில் துடிக்கும் தமிழ், பதறிய சேது... சின்ன மருமகள் பரபரப்பு புரொமோ Cineulagam
மகா சங்கமத்தில் ஷாக்கிங் விஷயத்தை பாண்டியனிடம் கூறிய சுரேஷ்... பாண்டியன் ஸ்டோர்ஸ், அழகே அழகு சீரியல் Cineulagam