யாழ்ப்பாணம் தாவடி சந்தியில் விபத்து: இருவர் படுகாயம் (VIDEO)
யாழ்ப்பாணம் - தாவடி சந்தியில் இலக்கத் தகடு அற்ற பேருந்து மோதியதில் பாடசாலை மாணவியும், அவரது தந்தையும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாவடி சந்தியில் இன்று காலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மோட்டார்சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தவர்களே சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் விபத்துடன் தொடர்புடைய பேருந்து இலக்கத்தகடு இல்லாத நிலையில் காணப்பட்டதாகவும், அது பாவனைக்கு உதவாத பேருந்து எனவும் விபத்தினை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






இந்த வாரம் ஓடிடி-யில் ரிலீஸாகும் எதிர்பார்ப்புக்குரிய இரண்டு படங்கள்.. Week end என்ஜாய் பண்ணுங்க Cineulagam

சவுதி அரேபியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 4000 பிச்சைக்காரர்கள்: கவலையில் பாகிஸ்தான்! News Lankasri
