சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும் முடிவின் நிலைப்பாடு: வெளியான தமிழரசுக் கட்சியின் அறிக்கை
வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பது தொடர்பான இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தீர்மானத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைத்தியர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
அவரால் நேற்றையதினம் (12.09.2024) வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.
வவுனியாவில் எடுக்கப்பட்ட ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான கட்சியின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும் இதன்போது குறிப்பிடப்பட்டுள்ளது.
முடிவு எடுக்கப்பட்டது
அத்துடன், சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்ட தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளைக் காலதாமதமின்றி நடைமுறைப்படுத்துவதற்கான ஒழுங்குகள் குறித்து அவருடன் பேசித் தீர்மானிப்பது தொடர்பாகவும் முடிவு எடுக்கப்பட்டது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், எதிர்வரும் 16ஆம் திகதி மீண்டும் கூடும் தேர்தல் தொடர்பான குழு, மேற்படி விடயங்கள் குறித்து முன்னேற்ற மீளாய்வைச் செய்து அது பற்றி மக்களுக்கு அறிவிக்கும் என்றும் ப.சத்தியலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 13 மணி நேரம் முன்
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri
ட்ரெண்டிங் 'முட்ட கலக்கி' பாடலுக்கு நடனமாடிய எதிர்நீச்சல் சீரியல் பிரபலங்கள்.. வீடியோ இதோ Cineulagam
புதிய நிகழ்ச்சியை தொடங்கியுள்ள விஜய் டிவி... முதலில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் யார் பாருங்க Cineulagam
முதல்முறையாக அதிநவீன F-22 ராப்டர் ஸ்டெல்த் போர் விமானங்களை இஸ்ரேலில் நிலைநிறுத்தும் அமெரிக்கா News Lankasri