வாக்குறுதிகளில் இருந்து பின்வாங்குகின்றதா அரசு! தமிழரசுக் கட்சி சந்தேகம்
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக நீக்குதல், புதிய அரசமைப்பு உருவாக்கம் மற்றும் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துதல் என்பவற்றுக்கான நடவடிக்கைகளை விரைந்து முன்னெடுப்பதில் அரசு பின்வாங்குவது போல் தென்படுகின்றது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சி(Itak) உறுப்பினர்கள் நோர்வே நாட்டுத் தூதுவர் மே-எலின் ஸ்ரெனரிடம்(May-Ellen Srennery) சுட்டிக்காட்டியுள்ளனர்.
இலங்கை மற்றும் இந்தியாவுக்கான நோர்வே தூதுவர் மே-எலின் ஸ்ரெனருக்கும், இலங்கைத் தமிழரசுக் கட்சி உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் இரா.சாணக்கியன் ஆகியோருக்கும் இடையிலான சந்திப்பு நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை கொழும்பில் நடைபெற்றது.
தமிழ் மக்களின் பிரச்சினைகள்
இந்தச் சந்திப்பின்போது அண்மையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் புதிய அரசு ஆட்சிபீடமேறியிருக்கும் நிலையில், அவர்களால் தமிழ் மக்களின் பிரச்சினைகள் எவ்வாறு அணுகப்படுகின்றன? ஏதேனும் முன்னேற்றகரமான நகர்வுகள் இடம்பெற்றிருக்கின்றனவா? என நோர்வே தூதுவர் தமிழரசுக் கட்சிப் பிரதிநிதிகளிடம் கேட்டறிந்தார்.

அதற்குப் பதிலளித்த பிரதிநிதிகள், ஏற்கனவே வாக்குறுதி அளிக்கப்பட்டதைப் போன்று வடக்கு, கிழக்கு மாகாணங்களில் காணிகள் முழுமையாக விடுவிக்கப்படவில்லை எனவும், தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகள் இன்னமும் முழுமையாக விடுதலை செய்யப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டியதுடன், இருப்பினும் அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என அரசு வாக்குறுதி அளித்திருப்பதாகத் தெரிவித்தனர்.
தமிழரசுக் கட்சி சந்தேகம்
அத்தோடு பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக நீக்குதல், புதிய அரசமைப்பு உருவாக்கம் மற்றும் மாகாண சபைத் தேர்தலை நடத்துதல் என்பன தொடர்பில் ஏற்கனவே வழங்கிய வாக்குறுதிகளிலிருந்து தற்போது அரசு பின்வாங்குவது போல் தென்படுவதாகவும், அவற்றுக்குரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதை அரசு தாமதப்படுத்துவதாகவும் சுமந்திரன் மற்றும் சாணக்கியன் நோர்வே தூதுவர் மே-எலின் ஸ்ரெனரிடம் எடுத்துரைத்தனர்.

இருப்பினும், புதிய அரசு ஆட்சிப்பீடமேறி சில வாரங்களே கடந்திருப்பதனால், அவர்களது நடவடிக்கைகள் தொடர்பில் உடனடியாக ஒரு மதிப்பீட்டுக்கு வருவது கடினம் என மே-எலின் ஸ்ரெனரிடம் சுட்டிக்காட்டிய அவர்கள், எனவே அவர்களது நகர்வுகள் குறித்து தொடர்ந்து அவதானம் செலுத்தி வருவதாகவும் குறிப்பிட்டனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan